Wednesday, January 13, 2016

BOFTA : சினிமா மேக்கிங் பற்றி சுந்தர்.சி கொடுத்த அற்புதமான உரை

தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் இயக்குநர்களில் ஒருவர், சுந்தர்.சி. இதை நான் சொல்லும்போதெல்லாம் நண்பர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். 

பிடித்த இயக்குநர்கள் வரிசையில் பாரதிராஜா, மகேந்திரன், மிஷ்கின் போன்றோருடன் சுந்தர்.சியைச் சேர்ப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. நகைச்சுவை என்பது மிகவும் கஷ்டமான விஷயம். த்ரில்லர், காதல், சோகம் போன்றவற்றைவிட, நகைச்சுவை ஜெனர் மிகவும் ரிஸ்க்கானது. அதில் ஒருவர் இருபது வருடங்களுக்கு மேலாக வெற்றிப்படங்களைக் கொடுக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமே அல்ல.

ஹிட்ச்காக் காலத்தில் அவரை ‘வெறும்’ த்ரில்லர் பட இயக்குநராகவே பலரும் பார்த்தார்கள். ஆனால் அந்த ஒரு ஜெனரில் அத்தனை வெரைட்டியாகவும் டெக்னிகலி மிரட்டலாகவும் அவர் செய்த சாதனைகள் பின்னரே புரிந்துகொள்ளப்பட்டன. அதே போன்று, சுந்தர்.சியின் பெயரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பெறும்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் அவர் பல நல்ல அறிவுரைகளை குறும்பட இயக்குநர்களுக்கு வழங்கியிருக்கிறார். அப்போதே, இவர் ஏன் டெக்னிகல் பேட்டிகளைக் கொடுப்பதில்லை என்று நினைத்திருக்கிறேன். இப்போது BOFTA ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் கொடுத்திருக்கும் இரண்டு மணி நேர உரை, என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளது. 

‘பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரே சும்மா இருக்கும்போது, நாம் அலட்டலாமா?’என்ற எண்ணத்திலேயே டெக்னிகலாகப் பேசாமல் அமைதியாக இருப்பதாக அவர் சொல்கிறார். இந்த அருமையான பேட்டியில், அவருடன் இந்த இடத்தில் மட்டும் மாறுபடுகிறேன். முன்னோர் செய்த தவறை நாமும் செய்ய வேண்டியதில்லை. ஃபிலிம் ஸ்கூலில் சேர முடியாத பலருக்கும், இத்தகைய டெக்னிகல் பேட்டிகள் பேருதவியாக இருக்கும் என்றால் மிகையில்லை. குறைந்தது இணைய மீடியாக்களிலாவது, தமிழ் சினிமா டெக்னிஷியன்கள் இத்தகைய உபயோகமான பேட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதே என் பல வருட வேண்டுகோள்.

சுந்தர்.சியின் இந்த அருமையான பேட்டியையும், தொடர்ந்து பாலா, ஆர்யா போன்றோரின் பேட்டியையும் எடுத்ததோடு நில்லாமல், இணையத்திலும் வெளியிட்ட BOFTA-விற்கும், ’யுடிவி’ தனஞ்செயனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

யூடியூப் லின்க்ஸ்: 

https://www.youtube.com/watch?v=4z15UluasxU
https://www.youtube.com/watch?v=Pn8i0-E4qOA
https://www.youtube.com/watch?v=fAXs6baey6s
 https://www.youtube.com/watch?v=W2e8y0NhJH8


சுந்தர்.சி. பேச்சில் உதிர்ந்த சில முத்துக்கள் இங்கே:


- அசிஸ்டெண்ட்டாக இருக்கும்போது, சீன் போட்டு நடிக்காதீர்கள். வேலை செய்வது போல் ஓவர் பில்டப் காட்டி நடிக்காதீர்கள். சின்சியராக வேலை செய்தால், பல கண்கள் உங்களைக் கவனிக்கும். வாய்ப்பு,

தேடி வரும்.

- ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், பென்ச் மார்க்காக ஏற்கனவே வந்த ஒரு படத்தை வைத்துக்கொள்ளுங்கள். காதலிக்க நேரமில்லை தான் உள்ளத்தை அள்ளித்தாவிற்கு பெஞ்ச் மார்க்.

-லொகேசனில் திடீர், திடீரென முடிவுகள் எடுக்க வேண்டிவரும். சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க, சைக்காலஜிக்கலாக தயாராக இருக்க வேண்டும்.

- ஒரு பக்கா திரைக்கதை அமைந்துவிட்டால், வெற்றி நிச்சயம்.

- காட்சிகள் துண்டு, துண்டாக இருந்தால் ஆடியன்ஸ் படத்துடன் ஒன்ற முடியாது. எனவே சீகுவென்ஸ் போன்று சில சீன்கள் இருக்க வேண்டும். (சுந்தர்.சி படங்கள், காமெடி சீகுவென்ஸுற்குப் பெயர்

பெற்றவை!)

- காமெடி என்பது கதையை நகர்த்துவதாக, கதைக்குள் காமெடியாக இருக்க வேண்டும். கதையில் வரும் கேரக்டர் ஒன்று காமெடியனாக இருந்தால், ஆடியன்ஸ் படத்துடன் ஒன்றுவார்கள்.

- வின்னர் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்படி, இடைவேளை வரை தான் வடிவேலு காமெடி வரும். ஆனால் வடிவேலுவின் நடிப்பும், பிரசாந்த் மார்க்கெட் டவுன் ஆனதும் தான், வடிவேலு படம் முழுக்க வரக் காரணம்.

(சூழ்நிலைக்கேற்ற முடிவுக்கு உதாரணம்.)

- ஹீரோ துதியில் இறங்காமல், படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள்.

- பிற படங்களின் இஸ்பிரேசனில் தான் சில சுந்தர்.சி படங்கள் உருவாகியிருக்கின்றன.

- லொகேசனில் கான்ஃபிடன்ஸுடன் வேலை செய்யுங்கள். யாருக்காகவும் பயப்படாதீர்கள்.

- ரஜினி, கமல் போன்றோரின் வளர்ச்சிக்குக் காரணம் இயக்குநருக்கு அவர்கள் தரும் மரியாதை தான்.

- லாஜிக்கை விட, சுவாரஸ்யமும் செண்டிமெண்ட்டுமே (டிராமடிக் எஃபக்ட்டே) முக்கியம். எல்லா சீன்களும் லாஜிக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அருணாச்சலத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

மேனேஜர், ரஜினியை இரவு 12 மணிக்கு எழுப்பி வெளியே போகச் சொல்லும் சீன் இதற்கு உதாரணம்.

- சினிமா எடுப்பதற்கான இலக்கணங்களை அறிந்துவிட்டு, பிறகு அதை மீறலாம். (Know the rules to break them!)

- சினிமா ஒரு விஷுவல் மீடியம். எனவே ஆடியன்ஸ் விஷுவலாக புரிந்துகொள்ளும் விஷயத்திற்கு, மைண்ட் வாய்ஸை யூஸ் பண்ணாதீர்கள்.

- ஒரு நடிகரை மனதில் வைத்து திரைக்கதை எழுதாதீர்கள். கிடைத்த நடிகரின் பாடி லாங்குவேஜுக்காக, அந்த கேரக்டரை இம்ப்ரூவ் செய்யுங்கள்.

- எப்போது ஒருவன் தன் இருகைகளை மறக்கிறானோ, அப்போதே அவன் நல்ல நடிகன் ஆகிறான்.
- சினிமா என்பது கடைசிவரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு விஷயம்.
- டைட்டானிக், 40 நாட்களில் ஷூட்டிங் முடிந்த படம். எனவே தெளிவான திட்டமிடலுடன் இறங்கினால், 60 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிடலாம். ஒருநாளைக்கு 5 நிமிடத்திற்கான ஃபுட்டேஜ் எடுத்தால்

கூடப் போதுமே!

- பட்ஜெட்டை எப்போதும் மைண்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள். படம் ஓடினாலும், ஓவர் பட்ஜெட்டினால் நஷ்டம் வந்துவிடலாம்.

- நன்றாக நேரம் எடுத்து, ப்ரி-புரடக்சன்/ப்ளானிங்கை பக்காவாக செய்துகொள்ளுங்கள். ஷூட்டிங்கில் இம்ப்ரூவ் செய்தாம் மட்டும் போதும்.

- புதுமுகங்களை வைத்து எடுக்கும்போது, ஒர்க்‌ஷாப்.ரிகர்சல் மூலம் ட்ரெய்னிங் கொடுங்கள்.

- இந்த ஜெனர் தான் என்று லிமிட் செய்துகொள்ளாதீர்கள். நமக்கு எது சரியாக வரும் என்று போகப்போக தெரியும்.

- ஒரு படம் முடிக்கும்போது, அதில் இருந்து வெளியில் வந்துவிடுங்கள். செண்டிமெண்டலாக, அதில் அட்டாச் ஆகிவிடாதீர்கள். ஒரு படம் முடியும்போதே, அடுத்த பட வேலையில் மூழ்கிவிடுங்கள்.

- பாக்கியராஜ் எழுதிய ‘வாங்க, சினிமா பற்றிப் பேசலாம்’ நூலை அனைவரும் படிக்கவும்.

- டெக்னாலஜி வளர்ச்சியினால், படம் எடுக்கும் நேரம் குறையத்தான் வேண்டும்.

- முதலில் சிஜி சம்பந்தப்பட்ட ஷாட்களை முடித்தால், மேக்கிங் டைமைக் குறைக்கலாம். ஷூட்டிங்கின்போதே, எடிட்டிங்கையும் முடித்துவிடுங்கள்.

- விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள், அவ்வளவு தான். மீடியா, நெட்டில் வருவதைப் படிக்கலாம், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை. படத்தை முடித்தபின், அதை கரெக்ட் பண்ண முடியாது!

- படைப்பாளிகள், ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருப்பது நல்லது அல்ல. ஃபேஸ்புக் போன்ற வெகுஜன ஊடகத்தில், அதிக இன்வால்வ்மெண்ட்டுடன் இருக்காதீர்கள். அங்கே இருக்கும்

20% ஆடியன்ஸை திருப்திப்படுத்த படம் எடுத்தால், வெளியே இருக்கும் 80% ஆடியன்ஸை நாம் இழக்க வேண்டி வரலாம்.

- ஒவ்வொருவருக்காக படம் எடுப்பது கஷ்டம். மெஜாரிட்டி மக்களுக்குப் பிடிக்கும்படியான விஷயங்களை படத்தில் வைத்தால் போதுமானது. ஒவ்வொருவரின் விமர்சனங்களைக்

கண்டுகொள்ளவேண்டியதில்லை.

- ஒவ்வொரு படமும், முதல் படம் போன்ற பயம் இருக்க வேண்டும்.
- முதல் படம் பலவருட உழைப்பில் உருவாவது. அது ஜெயிப்பது எளிது. அதன்பிறகு, சர்வைவல் தான் கஷ்டம்.

- ஒரு படம் ஓடினால், நான்குபேர் கைகொடுப்பார்கள். ஓடவில்லையென்றால், நாலாயிரம் பேர் துக்கம் விசாரிப்பார்கள்.
- டைரக்சன் என்பது 24 மணிநேர வேலை. விழிப்புடன் வேலை செய்யுங்கள்.
- யூடியூப் போன்ற இணையதளங்களில் டெக்னிகல் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் படித்து, நிறையக் கற்றுக்கொள்ளுங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.