Saturday, September 29, 2012

முருக வேட்டை_39

ப்படியா?” என்று கேட்ட அகிலா, சடாரென எழுந்தாள்.

வாங்க..போய் பாண்டியனோட பெர்சனல் ஃபைலை நாமளும் பார்க்கலாம்என்றாள்.

ரங்கராஜன் பாண்டியனின் பெர்சனல் ஃபைலை எடுத்து, அகிலாவிடம் கொடுத்தார். அகிலா அதை வாங்கி, அவசரமாகப் புரட்டிப் பார்த்தாள்.

“..ஊர் திருப்பூர்னு போட்டிருக்கே..அப்பா பேர் முருகையன்..அப்பா இப்போ உயிரோட இல்லை. அம்மாவும் சமீபத்துல இறந்துட்டாங்கள்ல?”

ஆமாம் மேம்

அப்பா பேர்ல எம்-ன்னு இனிஷியல் போட்டிருக்கு. அது என்ன பேர்னு டீடெய்ல் இருக்கா?”
இருக்கும் மேம்..கொண்டாங்க, பார்த்துட்டுச் சொல்றேன்என்று வாங்கிய ரங்கராஜன் சில  
 பக்கங்களைப் புரட்டியபின்முத்துச்சாமிஎன்றார்.

என்ன..முத்துச்சாமியா..இதே பேர் தானே அந்த கேஸ்ல இருந்துச்சு..புகார் கொடுத்தவர் அவர் தானே?”

ஆமா மேம்என்றார் ரங்கராஜன்.

சரி..இந்த ஃபைலை எடுத்துட்டு வாங்க..அந்த கேஸ் ஃபைலோட வச்சுப் பார்ப்போம்என்று சொல்லிவிட்டு, அகிலா தன் அறைக்கு ஏறக்குறைய ஓடினாள்.

சித்தர்மலை கேஸ் ஃபைலை எடுத்து, முத்துச்சாமி பற்றிய விவரத்தைத் தேடினாள். அவரும் பூசாரியும் கொடுத்த வாக்குமூலங்களைப் படித்தாள். “எங்களுக்கு பணம், நகைன்னு எதுவும் வேணாம் சார்..எங்க சாமியை மட்டும் திருப்பிக்கொடுங்க. வழக்கை வாபஸ் வாங்கிட்டு நாங்க எங்கேயாவது போய், நிம்மதியா வாழ்ந்துக்கறோம்.” என்பதையே அவர்கள் திரும்பத் திரும்ப பல இடங்களில் சொல்லியிருப்பது தெரிந்தது.

கவிதா ரங்கராஜனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்முத்துராமன் சார் இந்தக் கேஸ் பத்தி என்ன நினைச்சார்? அவங்க புகார் உண்மைன்னு நினைச்சாரா? இல்லே, சும்மா பொய் சொல்றாங்கன்னு நினைச்சாரா?”

அது எனக்குக் கரெக்ட்டாத் தெரியலை மேம்..ஆனால் அந்த நேரம் அவருக்கு நிறைய பொலிடிக்கல் பிரசர் இருந்துச்சு. ஆதாரமே இல்லாம அந்த மக்கள் பிரச்சினை பண்றாங்கன்னு ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க

இப்போ ரெண்டு முத்துச்சாமியும் ஒன்னுதானான்னு தெரிஞ்சா, கேஸ் முடிஞ்சிடும்என்றாள் அகிலா.

சித்தர்மலை கேஸ் முத்துச்சாமியோட ஃபோட்டோ இருக்கு மேம்..பாண்டியன் தாத்தா ஃபோட்டோவுக்கு எங்கே போறது? பாண்டியன்கிட்ட இருக்குமான்னு கூட டவுட் தான்என்று சொன்னார் ரங்கராஜன்.

 அகிலா தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். முத்துராமன் சார் குடும்பம் மருதமலைக்கு அடிக்கடி போனது ஏன்? வீட்டில் மற்ற இடங்களை விட்டுவிட்டு, பூஜை ரூமில் MARS 1024 என்று எழுதியது ஏன்? கண்டிப்பாக இது இரண்டிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்.

அகிலா முத்துராமன் கொலைக்கேஸ் ஃபைலை செந்தில் பாண்டியன் டேபிளில் இருந்து எடுத்து வரச்சொன்னாள். பாண்டியன் கொலையாளியாக இருக்கலாமோ என்ற கோணத்தில் ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றையும் மறுபடியும் படித்தாள்.

 - கொலையாளி முத்துராமனுக்கு நன்றாகத் தெரிந்தவன். அவன் உள்ளே நுழைய எந்த எதிர்ப்பும் அவர் காட்டவில்லை.
 - உள்ளே நுழைந்தபின் சோஃபாவில் அமர்ந்து பேசியிருக்கிறார்கள், தொடர்ந்து ஏதோ வாக்குவாதம்
 - பூஜை ரூமில் இருந்த நகைகள் திருட்டு..நகைக்காகத் தான் கொலை என்றால், மற்ற அறைகளில் இருந்த நகைகளை ஏன் எடுக்கவில்லை. அப்படியென்றால், சித்தர்மலையில் கிடைத்த நகைகளா அங்கு இருந்தன?
- MARS 1024 என்று முருகனைக் குறிக்கும் க்ளூ..முத்துராமனையும் பாண்டியனையும் இணைக்கும் முருகர் சம்பந்தப்பட்ட விஷயம்....சித்தர் மலை?
- லோக்கல் இன்ஸ்பெக்டரின் விசாரணைக்குறிப்பில்முத்துராமன் மகன் ஸ்ரீனிவாசன், அப்பா டெட்பாடியைப் பார்த்து அதிர்ந்ததைவிட, பூஜை ரூமைப் பார்த்து அதிர்ச்சியானது அதிகம்என்று எழுதியிருந்தது..அப்படியென்றால்...அப்பாவைவிடவும் உயர்வான விஷயம் அங்கிருந்ததா?..நகைகள் அப்பாவை விடவும் முக்கியமானவையா? இருக்காதே..

ஸ்ரீனிவாசனை அகிலா நன்கு அறிவாள். அவரும் அப்பா மாதிரியே நல்ல மனிதராயிற்றே..

அகிலா யோசனையுடன் ஃபோனை எடுத்து முத்துராமன் வீட்டிற்குக் கால் செய்தாள்.

ஹலோ..சார், நான் அகிலா பேசறேன்..வீட்ல தான் இருக்கிறீங்களா?....ஓகே சார்..நான் இப்போ அங்கே வந்தா உங்களைப் பார்க்கலாமா? , தேங்க் யூ சார்என்று பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் எழுந்தாள்.

நான் முத்துராமன் சார் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.” என்று ரங்கராஜனிடம் சொல்லிவிட்டு வெளியேறினாள்.


(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_39"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 28, 2012

முருக வேட்டை_38

"ரவணன், அந்த மருதமலைக்குப் பின்னால் உள்ள மலைத்தொடரில் சித்தமலை என்று ஒரு பகுதி இருந்துச்சு. தெரியுமா உனக்கு?”

ம்ஹூம்..தெரியாதுஎன்றான் சரவணன்.

தெரியாது..இங்கே கோயம்புத்தூரில் இருக்கிறவங்களுக்கே தெரியாது. அப்படியிருக்கும்போது, உனக்கு எப்படித் தெரியும். அந்த சித்தமலை அடிவாரம் தான் எங்கள் பூர்வீகம். அந்த காட்டிற்குள்தான் எங்களின் குலதெய்வம் முருகன் கோவில் இருந்துச்சு. கோவில்னா..கோவில் இல்லை..ஒரு சிலை..அவ்வளவு தான். மருதமலை முருகனின் ஒரிஜினல் அது தாங்கிறது எங்களோட நம்பிக்கை. அந்த காட்டிற்குள் வர முடியாததால். வெளியே வேறு சிலை வைத்துக் கும்பிட ஆரம்பிச்சு, பிறகு அதுவே நிலைச்சிடிச்சு. ஆனால் எங்க சாமி, எங்களுக்கே மட்டுமானதா, அந்தக் காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம இருந்துச்சு.”

இருந்துச்சா? அப்படீன்னா, இப்போ இல்லியா?’

இல்லை.அது இருந்தா நான் ஏன் இப்படி நிற்கறேன்?...முப்பது வருசத்துக்கு முன்னாடி, அந்த மலையடிவார மண்ணில் தான் எங்க குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டிருந்துச்சு. எங்களுக்கு தனித்தனியா சொத்துன்னு எதுவும் கிடையாது. எல்லாமே சமூகத்துக்குப் பொதுவா வைக்கிற பழக்கம் எங்களுக்கிடையில இருந்துச்சு. குருவி சேர்க்கி மாதிரி, எங்க முன்னோர்கள் சம்பாதிச்சதெல்லாம், பணமா, நகையா எங்ககிட்ட இருந்துச்சு. எங்களுக்கு எதுக்கு அதெல்லாம்? இந்த மலையும் காடும் எங்களுக்கு இருக்க இடமும், சாப்பிட சோறும் போட்டுச்சு. அதனால எங்க சம்பாத்தியம் எல்லாமே பொதுவில் வைக்கப்படும். அத்தனையும் குலசாமிக்கு அர்ப்பணம்னு முருகனுக்கே படைச்சிருவோம். ஒவ்வொரு வருசமும் சஷ்டி அன்னிக்கு, எங்க முருகன் சிலைக்குக் கீழே புதைச்சு வைப்போம். ஏதாவது மழை, புயல் நேரத்துல மட்டும் அதை சமூகத் தலைவர் வெளில எடுத்து, எல்லாருக்கும் பிரிச்சுக்கொடுப்பார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தலைவரா இருந்தது எங்க தாத்தா முத்துச்சாமி!”
உன்னோட சர்ட்டிஃபிகேட்டை நான் பார்த்தப்போ, பழங்குடி இனம்னு போட்டிருந்துச்சு..ஆனால் அதை நான் தீர விசாரிக்காம விட்டுட்டேன். அப்புறம் எப்படி நீங்க திருப்பூர் போனீங்க?”
நாங்க எங்கே போனோம்? விரட்டி அடிக்கப்பட்டோம்

ஏன்..?”

எல்லாத்துக்கும் காரணம் நாகரீகமான படிச்ச கனவான்கள் தான்...எங்க உலகத்தில் இயற்கையே எல்லாத்தையும் கொடுத்துச்சு. எங்களுக்கு பெரிய ஆசைகள்னு எதுவும் இல்லை. சமூகத்துக்கும், கடவுளுக்கும் கட்டுப்பட்டு வாழறதே எங்க வாழ்க்கை முறை. ஆனால் உங்களோட நாகரீக வாழ்க்கைல நீங்க என்ன செய்றீங்க? வம்ச வம்சமா பணத்துக்குப் பின்னே ஓடுறீங்க? எப்படி வாழறதுன்னுகூட உங்களுக்குத் தெரியாது. ஒரு பூ மலர்வதை ரசிக்கக்கூட உங்களுக்குத் தெரியாது. கேட்டா, அது பைசா பிரயோஜனமில்லாத விஷயம்னு சொல்வீங்க..பைசா..பைசா..பைசா தான் எல்லாமே உங்களுக்கு. அப்படி, உங்களோட நாகரீகக் கூட்டத்துல இருந்து சில அதிகாரிங்க, அப்போ..30 வருசம் முன்னே எங்க சாமியைப் பத்தி எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு, காட்டுக்குள்ளே வந்தாங்க. ‘அறநிலையத்துறைன்னு சொல்லிக்கிட்டு சிலபேரு உள்ளே வந்தாங்க. அந்தக் கோவிலை அவங்க கட்டுப்பாட்டுல எடுத்துக்கப்போறதாச் சொன்னாங்க.”

அரசாங்கம் அப்படி முடிவு பண்ணி, அனுப்பி வச்சிருந்துச்சா?”

இல்லை..அப்படி முடிவு எடுக்கலாமான்னு சோதனை பண்ணத்தான் வந்தாங்க. இந்தக் கோவில்ல இருக்கிற நகைகள் பத்தி, அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அது வந்த அப்புறமா, அதுக்கு முன்னாலயே தெரியுமான்னு எங்களுக்குத் தெரியலை. அதைவிடவும் முக்கியமா, அந்தச் சிலையைப் பார்த்ததுமே அவங்களுக்கு ஆசை வந்திடுச்சு

அந்தச் சிலையில அப்படி என்ன விசேஷம்?”

அது முருகர் சிலை இல்லை..அது ஒரு பெரிய வேல்..தங்கத்தால் ஆன வேல்!”

என்ன..தங்க வேலா?” ஒரே நேரத்தில் சரவணனும் கவிதாவும் கேட்டனர்.

ஆமாம்..அந்த வேல் தான் எங்க சாமி. அது பல வம்ச உழைப்பில் எங்க முன்னோர் செஞ்ச சிலை. அந்த அதிகாரிங்க, அப்போ மந்திரியா இருந்தவர்கிட்டப் போய் இதுபத்திச் சொல்ல, அந்த அரசியல்வாதியும் இதுல தீவிரமா இறங்கிட்டார். நாங்க வசிச்ச இடம் காட்டுக்கு வெளில இருந்துச்சு. இவங்களுக்கு அதுவே வசதியாப் போயிடுச்சு. ”

"ஆமா..இதுபத்தி நானும் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கேன்என்றான் சரவணன்.

ஒருநாள் எங்க சமூகம் சாமி கும்பிடுவோம்னு போனப்போ, அங்கே எங்க சாமியும் இல்லை, அதுக்குக் கீழே இருந்த எங்க சேமிப்பும் இல்லை.” என்றான் பாண்டியன்.


(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_38"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.