Friday, August 24, 2012

முருக வேட்டை_26

அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரெண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் உதித்தனன் உலகம் உய்ய!

மார்ஸா?” என்று ஒரே நேரத்தில் கவிதாவும் சரவணனும் கேட்டனர்.

ஆமா..MARS தான்என்றார் கூகி.

மார்ஸ் என்பது ரோமானியப் போர்க்கடவுள். அதனோட பேரைத் தான் செவ்வாய் கிரகத்திற்கு வச்சாங்கன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். உண்மையில் எட்ரூஸ்கன் இனத்து மக்களின் போர்க்கடவுளின் பெயர் மாரிஸ். அங்கேயிருந்து தான் ரோமானியர்களிடம் மார்ஸ் வழிபாடு வந்து சேர்ந்தது. எட்ரூஸ்கன் மக்கள் மாரிஸை மாரிஸ் ஹஸ்ரன்னா’-ங்கிற பேர்லயும் வழிபடுறாங்க.அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை மாரிஸ்!என்று சொல்லிவிட்டுக் கவிதாவைக் கூர்ந்து பார்த்தார் கூகி.

கவிதா நாங்க பால முருகன்னு சொல்றோமே? அது மாதிரியா?” என்றாள்.

கரெக்ட்..நீ இதைச் சொல்வேன்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரி தான்...ரோமானியர்கள் மட்டும் இல்லை, பண்டைய கிரேக்கர்களும் அரேஸ்-ங்கிற போர்க்கடவுளை வணங்கினாங்க. அந்தக் கடவுள் தான் செவ்வாய் கிரகத்தை கண்ட்ரோல் பண்ணுதுன்னும் நம்பினாங்க

ஏன் அப்படி?”

தெரியலை..முன்னோர்களுக்கும் நமக்கும் இடையில் முழுமையான தகவல் பரிமாற்றம் நடக்கலை..ஏன் எல்லாப் போர்க்கடவுளையும் செவ்வாயோட லின்க் பண்ணாங்கன்னு தெரியலை. ஆனால் செவ்வாய் கிரகம் உக்கிரமானது, அழிவைத் தரக்கூடியது எனும் நம்பிக்கையும் உலகம் முழுக்க இருந்திருக்கு, இருக்கு.

ஆமா..இந்திய ஜோதிடத்துல அதுக்கு முக்கிய இடம் இருக்கு

ம்...ரோமானியர்கள், கிரேக்கர்கள் மட்டுமில்லை, நார்வேலயும் டைர் எனும் போர்க்கடவுளை வழிபட்டிருக்காங்க. அவர் ஓடின் எனும் கடவுளுக்கும் ஓடினின் மனைவியான ஃப்ரிக் எனும் கடவுளுக்கும் பிறந்தவர் என்பது அவங்க நம்பிக்கை.

எங்க சிவன் - பார்வதி மாதிரியா?”

ஏறக்குறைய..அந்த டைர் கடவுளோட பேர்ல இருந்து தான் ட்யூஸ்டே’ -ங்கிற செவ்வாய்க்கிழமை வந்துச்சு..உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்..வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு கோள்களுக்கானவை. அதன்படி ட்யூஸ்டே என்பது செவ்வாய் கிரகத்துக்குரியது.

ஆமா..எங்க மொழில ட்யூஸ்டே-வை செவ்வாய்க்கிழமை..அதாவது டே ஆஃப் மார்ஸ்-ன்னு தான் சொல்றோம். வட இந்தியாலயும் மங்கள் வார்’-னு அதே அர்த்ததுல தான் சொல்றாங்க..ஆங், இப்போத் தான் ஞாபகம் வருது, முருகனுக்கு மங்களேஸ்வரர்-னு ஒரு பேரும் உண்டு..தமிழ்ல அவரை செவ்வாய்க்கு அதிபதின்னு சொல்வோம்..முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தான்

ஓ..சைனீஸ் பழங்குடி மக்கள்கிட்டக்கூட வே த்வோ எனும் போர்க்கடவுள் இருக்காரு..அவரும் அப்படித் தான்..அவரை ஸ்கந்தன்னும் சொல்றாங்க
எப்படி சார் இவ்வளவு ஒற்றுமை, இந்தக் கடவுள்கள் மத்தியில.?” ஆச்சரியத்துடன் கேட்டான் சரவணன்.

கூகி சிரித்தார்.

அது முன்னோர்கள் ஞானம் மூலமா அறிஞ்ச விஷயம்..இந்தியால இருக்கிற ஒரு ஞானியால எதை உணர முடியுமோ, அதையே கென்யால இருக்கிற ஞானியாலயும் உணர முடியும், இல்லியா? உங்க இந்து மதமே அதைத் தானே சொல்லுது..ஒவ்வொருத்தரும் ஞானி ஆக முடியும்..இல்லியா? அப்போ கிரெக்கத்துக்காரன், நார்வேக்காரன்னு எல்லாருமே ஆக முடியும்..ஆகியிருக்காங்க..அதனால தான் இது மாதிரி பல ஒற்றுமைகள், பல மதங்களுக்கு இடையில இருக்கு. ஆனால் இன்னிக்கு வரைக்கும் ஏன் போர்க்கடவுள்களை செவ்வாயோட தொடர்புபடுத்தினாங்கன்னு தெளிவாப் புரியலை..மார்ஸ்க்கு லத்தின்ல மார்மார்-னு பேரு..மார் என்பது இந்திய-ஐரோப்பிய மொழிகள்ல மரணம்னு தான் பொருள்தரும்..போர்-மரணம் இரண்டையும் தொடர்புபடுத்தி, அவங்க இதைச் சொல்லியிருக்கலாம்.
முருகனுக்கு இன்னொரு பேரும் இருக்கு..சேந்தன்னு..சேந்தன்னா சிவந்த நிறமுடையவன்னு பொருள்படும்.செவ்வாய்க்கு ரெட் ப்ளானட்னு ஒரு பேர்  இருக்கு. அப்போ செவ்வாய்க்கு அதிபதி என்பதால் தான் சேந்தன்னு சொன்னாங்களோ?” என்று கேட்டாள் கவிதா.

இருக்கலாம்..என்றார் கூகி.

சார்..அப்போ மார்ஸ்என்பதை முருகன்னு பொருள் கொள்ளலாமா?” என்று கேட்டான் சரவணன் ஆர்வத்துடன்.

ஆமா..மார்ஸ் தான் முருகன்..முருகன் தான் அரேஸ்..அரேஸ் தான் முரிக்..முரிக் தான் மார்ஸ்..அப்படித் தானே உங்க இந்துத் தத்துவமே சொல்லுது? ‘நீ எந்தப் பெயரில் வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்னு பகவத்கீதை சொல்லலை? பேரு மாறும்..பிரம்மம் ஒன்னு தானே?” என்று கேட்டார் கூகி.

:சார்..பகவத் கீதையும் தெரியுமா, உங்களுக்கு?” என்று ஆச்சரியமானாள் கவிதா.

பின்னே, படிக்கலேன்னா உங்க மாமா விட்ருவாரா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் கூகி.

கூகியின் மனைவி நேரமாகிவிட்டதை ஞாபகப்படுத்த, அனைவரும் எழுந்தனர்.
கவிதாவிற்கு உடனே இந்தியா செல்ல வேண்டும் போல் இருந்தது.

அடுத்த நாள் காலையில் கூகி மட்டும் சென்று நிலைமையைக் கண்காணித்துவிட்டு வந்தார். ஓரளவு அமைதி திரும்பியிருந்தால், சிவநேசன் வீட்டிற்குத் திரும்பினர்.

சரவணனும் கவிதாவும் MARS பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால், அடுத்த இரண்டு நாட்களையும் கஷ்டப்பட்டு ஓட்டிவிட்டு, இந்தியா கிளம்பினர்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

  1. அழகிய பகிர்வு
    தொடருங்கள் முருக வேட்டையை .....

    ReplyDelete
  2. அருமை,செங்கோவி!பலருக்குத் தெரியாத பல வரலாறுகள் உங்கள் மூலமாக!வாழ்த்துக்கள்!!!!!!!!!

    ReplyDelete
  3. நல்ல பதிவு , முருகனை பற்றியது , தொடருங்கள்

    ReplyDelete
  4. அற்புதமான விளக்கங்கள், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில்....! ஏகப்பட்ட புதிய தகவல்கள், பின்னணியில் இருக்கும் உங்கள் கடும் உழைப்பிற்கு வாழ்த்துகள் செங்கோவி!

    ReplyDelete
  5. புதிய தகவல்கள் வேட்டையில் பல முத்துக்கள்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.