Monday, October 31, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_2

அன்புள்ள செங்கோவிக்கு,

.................................... கீழே உள்ள பதிவைப் பாருங்கள் :

பிராமணர்கள் யார்? (http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html )

இதைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

இங்கணம்
****
---------------------------------------------------------------------------------------------------------

அன்புச் சகோதரிக்கு,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நீங்கள் அனுப்பிய கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையின் சாராம்சம் பலவருடங்களாக பிராமணர்களுக்குள் விவாதிக்கப்பட்டு/போதிக்கப்பட்டு வருவது தான். இது மீண்டும் மீண்டும் இளைய தலைமுறைப் பிராமணர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதில் பெரிய தவறொன்றும் இல்லை தான். 

ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ள இத்தகைய விளக்கவுரைகள் அவசியமே. ஆனால் பிரச்சினை இதை வெளியே உள்ளோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது வருகிறது. நீங்கள் அந்த நோக்கத்தில் எனக்கு அனுப்பவில்லையென்றும், பிராமணர் அல்லாத ஒருவனின் கருத்தை அறியும் ஆர்வத்துடனே எனக்கு அனுப்பினீர்கள் என்றும் அறிவேன். அந்தக் கட்டுரை பெரிதென்பதால், பதிலும் பெரிதாகலாம், பொறுத்தருள்க.

பிராமண சமூகத்தின் மனமயக்கங்களில் ஒன்று தன்னையும் ‘பிராமணன்’ என்றே உணர்வது. பிராமண சமூகத்தில் பிறந்ததனால் மட்டுமே அவ்வாறு ஆகிவிடமுடியும் என்று நம்பிக்கொள்கிறீர்கள். நமது முன்னோர்களான முனிவர்களையும், ரிஷிகளையும், துறவிகளையும் உங்களைப் போன்ற பிராமணர்களாக உரிமையுடன் நினைத்துக்கொள்கிறீர்கள். 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வர்ணத்திற்கும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் குழப்பிகொள்வது தான். வர்ணம் என்பது எப்போதும், இப்போதும் நான்கு வகையே. ஜாதி என்பது எப்போதும் நான்காக இருந்தது இல்லை.

இதை உங்களுக்கு விளக்க கிருஷ்ணரைத் தான் அழைக்கவேண்டும்.

‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் - இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் கண்ணன், பகவத் கீதையில்.

அதை பிறப்பின் அடிப்படையில் படைத்ததாக அவன் எப்போதும் சொல்லவில்லை. குணத்தின் அடிப்படையில், ஒருவரது இயல்பின் அடிப்படையில் படைத்ததாகவே சொல்கிறான்.

அத்தகைய பிராமணர்கள் அப்போதும் இப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். விஸ்வாமித்திரர் கதை சொல்வதும் அதைத் தான். ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும், அவர் ஷத்ரியர் அல்ல. 

இயல்பின் அடிப்படையில் பிராமணராய் ஆனார். அதை அப்போதைய சமூகமும் ஏற்றுக்கொண்டது. அதற்கான வாய்ப்பு அப்போது திறந்தே இருந்தது.

“எவனொருவன் அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்” - 

---- பிராமணனுக்குரிய லட்சணங்களாக சொல்லப்படும் இந்த வரையறை, அனைத்து ஜாதி மக்களுக்குமான அழைப்பே ஆகும். அவர்களில் யாரெல்லாம் இத்தகைய இயல்பினை உடையவராய் பிறந்துள்ளாரோ, யாரெல்லாம் இத்தகைய இயல்பினைப் பெற ஆர்வத்துடன் போராடுகின்றாரோ, அவர்கள் எல்லாரும் பிராமணர்களே.

எனக்குத் தெரிந்த ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் மூன்று  ஆண்குழந்தைகள். கடைசிப் பிள்ளைக்கு ஆன்மீகத்தின் மேல் தீவிர நாட்டம். பெற்றோர் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் முடித்தார். ஆனாலும் தினமும் தியானத்தில் ஆழ்ந்தார். வேலைக்குப் போனார். நமது சாமியார்களின் ஆசிரமங்களில் ஒன்று விடாமல் சுற்றினார். 

ஒருகட்டத்தில் வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தான் ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்லிவிட்டு, வீட்டைவிட்டே ஓடிவிட்டார். அவரால் ஒரு அலுவலகத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு பொருளாதாரச் சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அதுபற்றி அவர் கவலைப்படவேயில்லை. அவரது நாட்டம் எல்லாம் பிரம்மத்தின் மீதே.

அதே இயல்பை நீங்கள் பாரதியிடமும் பார்க்க முடியும். தேடல் நிறைந்த எல்லா மனிதர்களும் பிராமணர்களே. அலுவலக வேலையில் சுகம் கண்டுகொண்டு, அதனால் கிடைக்கும் வசதியில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, நம்மையும் பிராமணர் என்றோ, பிராமண வழித்தோன்றல் என்றோ நினைத்தால்.....சாரி!

ஆன்மீகத் தேடல் நிறைந்த அந்த நண்பரும், பாரதியும் தான் பிராமணர்கள், பிராமணர்களின் வாரிசுகள். அவர்களே அப்படி அழைத்துக்கொள்ள தகுதியானவர்கள். நிச்சயம் நாம் அல்ல. அப்படி அழைத்துக்கொள்வோரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் நாம் செய்வதற்கில்லை.

ஜாதி என்பது பலகூறுகளால் ஆனது. ஒரு ஜாதியில் எப்போதும் சில பெரிய பிரிவுகள் இருக்கும். நாயக்கர் கம்பளத்து நாயக்கர், காட்டு நாயக்கர் என பல பிரிவாகப் பிரிவர். முக்குலத்தோர் மறவர்-கள்ளர்-அகமுடையார் என பிரிவர். அந்த பிரிவுகளில் நுழைந்தால் அவை கிளைகள் என்ற பெயரில் மேலும் பிரியும். அந்தக் கிளைகளும் உள்ளுக்குள் ‘கொத்து’க்களாக மேலும் பிரிபடும். 

உண்மையில் இவை என்ன? நாம் தலைகீழாகவே இவற்றைப் பார்க்கின்றோம்.

ஆதியில் கூடி வாழத்தொடங்கிய மனித இனம், பாதுகாப்புக் காரணங்களுகாகவும், சுமூக சூழ்நிலைக்காகவும் சிறுசிறு கூட்டமாக தன்னை தொகுத்துக்கொண்டது. வாழும் இடத்தைப் பொறுத்து 

அவை தன்னை பல்வேறு பெயர்களாக அழைத்துக்கொண்டது. அவையே அடிப்படைக் கொத்துகளாக அமைந்தன. வாழ்வியல் தேவைகளினாலும், நாகரீக வளர்ச்சியினாலும் அவை தன்னை ஒத்த பிற கொத்துக்களுடன் தொகுத்துக்கொண்டு கிளைகளாக வளர்ச்சியுற்றன.

அதையடுத்துவந்த நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் காலகட்டத்தில், ஆட்சிநலனுக்காக ஒத்த கிளைகள் ஜாதிகளாக திரட்டப்பட்டன. மன்னர்பிரான் பெரும்பாலும் எல்லா ஜாதிகளில் இருந்தும் பெண் எடுத்து, சுமூக உறவைப் பேணினார். அந்த மரியாதைக்குப் பிரதிபலனாக அந்த ஜாதிகளும்-கிளைகளும்-கொத்துக்களும் மன்னராட்சிக்கு விசுவாசமாய் நடந்துகொண்டன.

அந்த நேரத்திலேயே வர்ணமும் ஜாதியும் ஒன்றாகக் குழப்பப்பட்டன. பிராமண வர்ணம் எப்போதும் உயர்ந்தது. புத்தர் போன்ற ஷத்ரிய குலத்தில் பிறந்த பிராமணர்கள், அனைத்துத் தரப்பாலும் மதிப்புடன் போற்றப்பட்ட காலம் அது. நிர்வாக வசதிக்காக ஜாதிகளாக மக்கள் தொகுக்கப்பட்டபோது, ஆட்சியாளர்களின் வசதிக்காகவே ’பிறப்பின் அடிப்படையில் வர்ணம்’ என்பது 
நிலைநாட்டப்பட்டது.

வைசிய ஜாதியில் பிறந்த எல்லாருமே வணிகத்தில் சிறந்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் இயல்புப்படி அதாவது வர்ணப்படி வைசியர்கள் அல்ல. ஆனாலும் ஆதிவாசிக் குழுக்களாக வாழ்ந்த நம் சமூகம் நாடு என்ற வரையறையின் கீழ் தொகுக்கப்பட, இந்த கட்டாய ’வர்ணச் சாயம் பூசுதல்’ அவசியம் ஆயிற்று.

இயல்பில் ஷத்ரியனாக இல்லாமல், ஷத்ரிய ஜாதியில் பிறந்த பலரின் வாழ்வும், இந்த வரையறையினால் பாதிக்கப்படவே செய்தது. மேலும், ஆதி திராவிட சாதிகள், இந்தத் திட்டத்தால் நசுக்கப்பட்டன.

ஆனாலும் பெருவாரியான அளவில் இந்த சிஸ்டம் வெற்றியடைந்தது.

ஆனால் கண்ணன் பகவத் கீதையில் எச்சரித்த வர்ணக் கலப்பு அப்போதே நடந்துவிட்டது. ‘வர்ணக்கலப்பு’ பல அபாயங்களைக் கொண்டுவரும் என்றே கண்ணன் சொல்கிறான். அவன் சொல்வது ஜாதிக்கலப்பு பற்றியல்ல. மல்டிபிள் பெர்சனாலிட்டி பற்றி.

அடிப்படையில் ஷத்ரிய குணமுள்ள ஒருவன், பிராமண குலத்தில் பிறந்தால், மூர்க்கன் என்றே அவர்களால் அழைக்கப்படுவான். அதன்பிறகு அவன் ஆன்மீக ஈடுபாடு உள்ளவனாக நடிக்க ஆரம்பிப்பான். முழுமையான ஷத்ரியனாகவும் இல்லாமல், பிராமணனாகவும் ஆகாமல் வர்ணக்கலப்பால் சீரழிவான். (அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான ஆட்களை திருச்செந்தூர் முருகன் 
கோவில் கருவறையிலேயே பார்த்திருக்கிறேன்.)

அந்த முறையின்மூலம் ஆட்சியாளர்களும், பிராமணர்களும் சமூகத்தின் மேல்மட்டத்தில் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பெரிய சதித் திட்டம் ஏதும் காரணம் என்று நான் நினைக்கவில்லை. இப்போது எப்படி பிற்படுத்தப்பட்ட சாதிகள், அதிகாரத்தில் தங்களை மட்டுமே நிலைநாட்டியுள்ளனவோ, அதே போன்று இயல்பாகவே அது நடந்தேறியது. சமூகக் கட்டுமானம் சாதிமுறை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.

நிலப்பிரபுத்துவக் காலம்வரை எல்லாம் சுமூகமாகவே நடந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் அந்த அமைப்பு சிதறடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அதைவிட வலுவான அமைப்பான ஜனநாயகம் அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆகியிருந்தது. எனவே நிலப்பிரபுத்துவ அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு, சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக மலர்ந்தது.

காந்தியும் ஆரம்பக் கட்டங்களில் வர்ணம், ஜாதி இரண்டையும் குழப்பிக்கொண்டிருந்தார். நம் முன்னோர்களைப் போலவே அவரும் ஜாதி அமைப்பே நம் சமூகக்கட்டுமானத்திற்கு அடிப்படை, அதுவே நம்மை ஒன்றிணைத்துக் காக்கும் என்று நம்பினார். 

ஆனால் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர், ஜாதி மேல்கீழாக மக்களை பிரித்து வைத்திருப்பதையும், அதனால் விளைகின்ற அதர்மங்களையும் கண்டார். அதன்பின், தன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்னது தான் இன்றளவும் உண்மை :

நவீனக் காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் ஒருவர் உடலால் உழைப்பது அவசியம், தவிர்க்க முடியாதது. எனவே இனி உடலால் உழைக்கும் நாம் அனைவரும் சூத்திரர்களே. 

அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்
செங்கோவி

டிஸ்கி: சென்ற பகுதிக்கு குறிப்பிடத்தக்க பின்னூட்டங்கள் அளித்த ஸ்பீடு மாஸ்டர், டாக்டர்.வடிவுக்கரசி, கிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றி.
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_2"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

215 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, October 30, 2011

ஏழாம் நரகமும் ஏழாம் அறிவும்

மய சடங்குகளுக்கு எதிராக ஞானமார்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புத்தர் உருவாக்கிய புத்தமதம், அவர் மறைவிற்குப் பின் சீனாவில் சடங்குகளில் மூழ்கி தத்தளித்தது. புத்தரின் காலத்திற்கு 600 ஆண்டுகளுக்குப் பின் போதி தர்மர் தோன்றினார். புத்த மதத்தின் அடிப்படையான ஞானத்தையும், அதை அடைவதற்கான தியான வழிமுறைகளையும் மக்கள் கைவிட்டிருந்த நேரம் அது.

எனவே தனது குரு ஸ்ரீபிரக்யதாரா தேவியாரின் கட்டளைப்படி சீனா நோக்கிப் புறப்பட்டார். புத்தரைப் போன்ற மற்றொரு ஞானி சீனா நோக்கி வருவதை அறிந்த சீனச்சக்கரவர்த்தி வூ, மகிழ்ச்சியோடு போதி தர்மரை வரவேற்றார்.
தான் பல புத்த விகார்களைக் கட்டியிருப்பதாகவும், பல புத்த பிக்குகளுக்கு உணவு-உடை-உறைவிடம் கொடுத்துப் பராமரித்து வருவதாகவும் சக்கரவர்த்தி சொன்னார். அந்த புத்த பிக்குகள் சக்கரவர்த்தி சொர்க்கத்தில் கடவுளாகப் பிறப்பார் (!!) என்று வேறு சொல்லி வைத்திருந்தார்கள். இதையெல்லாம் போதி தர்மரிடம் சொல்லும் சக்கரவர்த்தி வூ “மாபெரும் ஞானியான நீங்கள் சொல்லுங்கள். புத்த மதத்திற்காக இவ்வளவு செய்திருக்கும் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்கிறார்.

அதற்கு போதி தர்மர் சொன்ன பதில் “ஒன்றும் கிடைக்காது. அதற்குப் பதிலாக கொடிய ஏழாம் நரகத்திற்குத் தான் போவீர். தயாராய் இரும்”

வூ பதறிப் போனார். “நான் என்ன தவறு செய்தேன்? “

“புத்தத்தின் பாதையில் கைம்மாறு என்பதே கிடையாது. பதிலுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆசையுள்ள மனதின் வழக்கம். புத்தம் ஆசைக்கு எதிரானது. உம் ஆசையே உம்மை ஏழாம் நரகத்தில் தள்ளும்” என்றார் போதி தர்மர்.

”தமிழரின் பெருமையையும், மறந்துவிட்ட போதி தர்மனையும் நான் ஞாபகப்படுத்திவிட்டேன். எனக்குப் பதிலாக என்ன கிடைக்கும்?” என்று ஏ.ஆர். முருகதாஸ் கேட்டால் துரதிர்ஷ்டவசமாக போதி தர்மரும் நாமும் ஏழாம் நரகத்தையே முருகதாஸ்க்கு சுட்ட வேண்டிய பரிதாப நிலை.

சக்கரவர்த்தி செய்ததில் பெரிய தவறு புத்தமதத்தின் அடிப்படையான ஞானமார்க்கத்தை கடைப்பிடிக்காததும், மக்களிடையே அதை எடுத்துச் சொல்லாததுமே. ஏறக்குறைய ஏர்.ஆர்.முருகதாஸ் அதையே இங்கே செய்திருக்கிறார்.
போதி தர்மர் ஏதோ குங் ஃபூ தெரிந்த சித்த வைத்தியர் என்ற ரேஞ்சில் அவர் படம் பிடித்திருப்பதைப் பார்த்தால், சிரிப்பு தான் வந்தது. ஏறக்குறைய ‘தாடி வைத்த வேலாயுதமாக’ போதி தர்மரை ஆக்கிவிட்டு பெருமை-பெருமை என்று பேசுவதை என்னவென்று சொல்வது?

அவர் சைனா போனதே மக்களை கொள்ளை நோயில் இருந்து காக்கத் தான் என்ற ரேஞ்சுக்கு வரலாற்றைத் திரிப்பது எந்த அளவிற்குச் சரி? போதி தர்மர் என்ற ஞானி பார்ட்-டைமாகச் செய்த மருத்துவ வேலையையும், குங்க் ஃபூ வேலையையும் முழுநேரத் தொழிலாக காட்டி, அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக்கியது எதற்காக?

ஒருவேளை தயாரிப்பாளர் “போதி தர்மர்-ஞானம்-தியானம் என்று படம் எடுத்தால் என்ன கிடைக்கும்?” என்ற கேள்விக்கு ’இம்மீடியேட் நரகம்’ என்று பதில் வந்ததாலா?

இப்போது ஒரு பழைய சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருகிறது..

சர்தார்ஜிகளுக்கு பெரிய குழப்பம்..ஏன் எல்லோரும் நம்மை முட்டாள் என்கிறார்கள் என்று.. எனவே அவர்கள் தங்களில் ஒரு பெட்டரான புத்திசாலியை(!), அதிபுத்திசாலிகள் வாழும் அமெரிக்காவிற்கு அனுப்பி தங்கள் குழப்பத்திற்கான தீர்வைக் கண்டுபிடிப்பது என்று முடிவு செய்கிறார்கள். ஒரு சர்தார்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கா ஏர்போர்ட்டில் போய் இறங்குகிறார். வெளியில் வந்து டாக்சியில் ஏறியவுடன் டாக்ஸி டிரைவர் “எங்கே போகணும்?” என்று கேட்கிறார். சர்தார்ஜி தான் வந்த விஷயத்தைச் சொல்லி ”இதைத் தெரிந்துகொள்ள எங்கே போகணுமோ அங்கே போ” என்கிறார்.

அதற்கு டிரைவர் “உங்களை ஏன் முட்டாள்கள்னு சொல்றாங்கன்னு தெரியணும் அவ்வளவு தானே..நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல். அப்புறம் உனக்கே புரிஞ்சிடும். எங்க அப்பாக்கு 3 பசங்க. ஒன்னு என் அண்ணன். இன்னொன்னு என் தம்பி. அப்போ 3வது யாரு?”

சர்தார்ஜி யோசிக்கிறார்.யோசிக்கிறார்..ம்ஹூம்..பதில் தான் தெரியவில்லை..டிரைவர் கடுப்பாகி “அட முட்டாப்பயலே..இதுகூடத் தெரியலியா? நாந்தாண்டா அது” என்கிறார்.

சர்தார்ஜியும் “அட..ஆமால்ல..கரெக்ட்டு..நீ தான் அது” என்கிறார்.

“இப்போப் புரியுதா, உங்களை ஏன் முட்டாள்னு எல்லாரும் சொல்றாங்கன்னு?”

“நல்லாவே புரியுது..உடனே வண்டியைத் திருப்பு..நான் இந்தியா திரும்புறேன்” என்று சொல்லிவிட்டு இந்தியா திரும்பினார்.

இந்தியா வந்ததும் தன் சொந்தங்களையெல்லாம் அழைத்தார். “நான் இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்குப் பதில் சொன்னா, உங்களுக்கே நம்மை ஏன் முட்டாள்னு எல்லாரும் சொல்றாங்கன்னு தெரியும்...என் அப்பாக்கு 3 பசங்க. ஒன்னு என் அண்ணன், இன்னொன்னு என் தம்பி. அப்போ 3வது யாரு?”

மொத்தக்கூட்டமும் தீவிர யோசனையில் ஆழ்ந்தது. நேரம் தான் போனதேயொழிய கூட்டத்தில் இருந்து பதில் வரவில்லை. நம் சர்தார்ஜி கடுப்பாகிச் சொன்னார் “அட முட்டாப் பசங்களா..இதுகூடத் தெரியலியா..அந்த டாக்ஸி டிரைவர் தான் அந்த 3வது பையன்”

படத்தில் பொதுமக்களிடம் மைக்கை நீட்டியும் படத்தின் டிரைலரிலும் “போதி தர்மர் யார்?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. என்ன அநியாயம்..யாருக்கும் பதில்  தெரியவில்லை. ”அட முட்டாத் தமிழங்களா..இதுகூடவா தெரியலை..”என்று முருகதாஸ் சொல்லியிருக்கும் சர்தார்ஜி ஸடைல் பதில் தான் இந்த ஏழாம் அறிவு.
மசாலா நாயகனான ரஜினிகாந்தின் படங்களில்கூட தைரியமாக தியானம்-ஞானம் பற்றி அரைகுறையாக காட்சிகள் வசனங்கள் வரும்போது, போதி தர்மர் என்ற மாபெரும் ஞானியைப் பற்றிய படத்தில் அதைக் கவனமாக தவிர்த்த மர்மம் தான் என்ன?

முருகதாஸிற்கு இதெல்லாம் தெரியாது என்றும் சொல்லமுடியாது .”ஓஷோ போதி தர்மரை இரண்டாம் புத்தர் என்று சொல்கிறார்” என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது. மேலே விவரித்த சக்கரவர்த்தி வூ சம்பவம் ஓஷோவின் “Bodhidharma: The Greatest Zen Master “ என்ற நூலின் ஆரம்பத்திலேயே சொல்லப்படுவது.

சோழர்களை நாம் இன்றளவும் மதித்துப் போற்றுவதற்குக் காரணம் அவர்களது நாகரீகம் தான். செல்வராகவன் என்ற அதிபுத்திசாலி அந்த அடிப்படை விஷயத்தை விட்டுவிட்டு, காட்டுமிராண்டிகளாக சோழர்களை சித்தரித்தது போலவே, இங்கே முருகதாஸும் போதி தர்மரின் அடிப்படியான ஞானத்தை விட்டு விட்டு அவரை சூப்பர் ஹீரோ ஆக்கியுள்ளார்.

தமிழர் வரலாற்றை, தமிழர் பெருமையை திரிக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல இன்னும் நாம் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ?

கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி போன்ற படங்களின் இயக்குநர்கள் டிஎன் ஏ மாதிரி கிடைத்தால், அதை ஸ்ருதி ஹாசனிடம் கொடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் -செல்வராகவன் வகையறாக்களின் டிஎன் ஏ-வை மாற்றி அமைக்கச் சொல்லலாம்..

ஞானம் பற்றிப் பேசினால் தமிழனுக்குப் புரியாது என்று தானாகவே தமிழனை தரக்குறைவாக நினைத்துக்கொண்டு, அதை மூடி மறைத்துவிட்டு தமிழ்-தமிழர் பெருமையை படம் பேசுவதாகக் கூறுவது சரி தானா?

கருத்தியல்ரீதியாக இந்தப் படத்தை தொடர்ந்து விமர்சித்தால், இன்னும் கடுமையான கேள்விகளை வைக்கவேண்டி வரும் என்பதால்...........


வெறும் பொழுதுபோக்குப் படமாக மட்டும் இதை அணுகினால், இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சூர்யாவின் உழைப்பு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அதுவும் போதி தர்மர் பற்றிய காட்சிகளும், இரண்டாம் பாதிப் படமும் தமிழ்சினிமாவிற்கே புதுசு. அந்த வில்லன் கேரக்டர் -சேசிங் போன்றவற்றை முருகதாஸ் சொன்னது போல் ஹாலிவுட்காரர்களே காப்பி அடித்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு புதிய சிந்தனை, பரபரவென நகரும் ஆக்சன் காட்சிகள்.  ஸ்ருதி ஹாசனின் துல்லியமான தமிழ் உச்சரிப்பு இன்னுமொரு ஆச்சரியம்.

நிச்சயம் ஒருமுறை பார்க்கப்பட வேண்டிய கமர்சியல் படம் தான் இது.

நான் படித்தவற்றில், என்னைக் கவர்ந்த விமர்சனம் கீழே:


ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)


திரைக்கதை ரீதியாக ஏ.ஆர்.முருகதாஸ் செய்த தவறு என்ன என்று தெளிவாகச் சொன்ன விமர்சனம் இது.

மேலும் வாசிக்க... "ஏழாம் நரகமும் ஏழாம் அறிவும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

99 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, October 29, 2011

மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள் - பதிவர் நிரூபனின் விமர்சனம்

போட்டி, பொறாமை நிறைந்த பதிவுலகில் என்னைஆச்சரியப்பட வைக்கும் வெகுசிலரில் நிரூபனும் ஒருவர். மன்மதன் லீலைகள் தொடர் 50 பகுதிகளைத் தாண்டியதுமே ஒரு விமர்சனப் பதிவு தொடர் முடிவில் போடுவதாகச் சொன்னார். நிரூபனின் தமிழ் மேல் நமக்குத் தனிப் பிரியம் உண்டு. எனவே நானும் எல்லாப் பாகங்களையும் எழுதி முடித்தவுடன், அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையை ப்ரூஃப் பார்க்க எனக்கு அனுப்பி வைத்தார்.

பிறகு யார் வலைப்பூவில் இதைப் பதிவேற்றுவது என்று ஒரு சிறிய அன்புச்சண்டை நடந்தது. கடைசியில் தம்பி எனக்கே விட்டுக்கொடுத்தார். விமர்சனத்திற்கும், விட்டுக்கொடுத்தலுக்கும் நன்றி நிரூ.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள்

யந்திர வேகமான இவ் உலகில் மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனச் சிலர் சொல்லி நிற்க, வீழும் நிலை வரினும் எம் தமிழை எத் துறையினூடாகவும் வாழ வைப்போம்! எனத் திட சங்கற்பம் பூண்டவர்களாய் தமிழ் விரும்பிகள் இன்று தரணியெங்கும் வீறு நடை போடுகின்றார்கள். தமிழ்த் தாய் அகிலத்தின் அனைத்துத் துறையினூடாகவும் ஏறி வலம் வந்து, தடைகளையும், தடங்கல்களையும் தாண்டித் தாவிப் பிடிக்க முடியாத உயரத்தில் வீற்றிருக்கிறாள். இணையத்தில் இனிமைத் தமிழில் எம் இதயத்தில் கொலுவிருக்கும் நிகழ்வுகளை எழுதிப் பதிவேற்றி அகிலமும் முழுதும் கொண்டு சேர்க்கும் அரிய பணியினைச் செய்து கொண்டிருப்பவை தான் வலைப் பதிவுகள்.

எம் மனதின் எண்ணங்களை, எம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கற்பனைத் தமிழ் இலக்கிய ஊற்றுக்களை, நாம் ரசிக்கும் விடயங்களை, எமைக் கடந்து போகும் அன்றாட நிகழ்வுகளை ரசனை கூட்டி, அழகு சேர்த்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் அரிய பணியினை கூகுள் எனும் மிகப் பெரும் வலை நிறுவனம் இலவசமாய் செய்து தருவதும், எம் தமிழில் எழுதும் வசதிகளை அவ் வலைப் பதிவு பெற்று நிற்பதும் நாம் அனைவரும் எம் தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் ஆவலினைத் தூண்டுவதற்கான அரிய செயல் அல்லவா? என்று சில வேளை ஐயம் கொண்டுள்ளேன். வெகுஜன ஊடகமாக எம் கையருகே இருந்து விரும்பிய நேரம் விரும்பிய தகவலை உலகின் எப்பாகத்திற்கும் கணினி ஊடே கொண்டு செல்வதற்கான கருவியாக இருப்பதுவும் இந்த வலைப் பதிவு அல்லவா?

"பரபரப்புத் தலைப்புக்களும், சுண்டி இழுக்கும் சூப்பரான மேட்டர்களும் விலை போகும் இங்கே" எனும் எழுதாத வலிந்து திணிக்கப்பட்ட யதார்த்தம் வலைப் பதிவில் இருந்தாலும், இலக்கியப் படைப்புக்களும், இனிமையான விடயங்களும் பலர் மனதையும் கவரும் என்பது உண்மை தானே?" 

இத்தகைய வலைப் பதிவில் ஒவ்வோர் நாளும் வெவ்வேறு விடயங்களை வெவ்வேறு உள்ளடக்கத்தில் எழுதும் போது, வாசகர் வருகை அதிகரிக்குமாம். ஆனால் அந்தப் பதிவு பலராலும் படிக்கப்பட்டாலும் ஆழமாய் பலர் மனதில் பதியாது என்பது நிதர்சனம். இத்தகைய சூழ் நிலையில் ஒரு நெடுந் தொடரை தினந் தோறும் அதிகளவான வாசகர் பரப்பெல்லையினை நோக்கி நகர்த்துவது என்பது கடினமான விடயம். 

நெடுந் தொடரைப் பல பாகங்கள் நோக்கிக் கொண்டு செல்லும் போது, ஒரே தலைப்பில் கொண்டு சென்றால் வலைப் பதிவிற்கு வரும் வழமையான கூட்டம் குறைந்து விடுமென்பது பதிவர்களின் உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு. இவற்றையெல்லாம் எதிர்பார்க்காது, இலக்கிய வெறியோடு யதார்த்தம் கூட்டி, வாசகர்களுக்குச் சலிப்பின்றி, அத் தொடரைத் தன்னை நாடி வரும் - தன் பதிவினைப் படிக்க வரும் வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் சுவைபட எழுதி வாசக உள்ளங்களின் அமோக ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் அப் படைப்பானது அமைகின்ற போது; அது தான் அத் தொடரின் வெற்றி என்பதற்கான மகுடமாகி ஒரு பதிவரின் ஆத்ம திருப்தி எனும் மன நிறைவினைப் பூர்த்தி செய்கிறது.

அதிகளவான வாசகர்களை உள் இழுத்து,  இலக்கியச் சுவையோடும், இன்ப மூட்டும் கிளு கிளு குறிப்புக்களோடும், மனதில் எழும் எண்ண அலைகளின் வேறுபாட்டிற்கமைவாக வெவ்வேறு தள வடிவிலான கதை நகர்வில் மன்மதன் லீலைகள் எனும் பெயர் கொண்ட நெடுந் தொடரினை வெற்றிகரமாகப் படைத்து இணையமூடே உலா வரும் இலக்கிய விரும்பிகளின் இலக்கியத் தாகத்திற்கு இணையில்லா விருந்தளித்திருக்கிறார் செங்கோவி அவர்கள். 

தன் கல்லூரி வாழ்வில் தான் கண்டு அனுபவித்த விடயங்களின் கோர்வையாகவும், தன்னைச் சுற்றியிருந்த நண்பர்களின் லீலைகள் - அட்டகாசங்கள் - அலப்பறைகள் - ரகளைகள் - கலகலப்பு நிறைந்த காலேஜ் வாழ்வின் கண் முன்னே நிற்கும் காட்சிகள், சுவையான எப்பொழு நினைத்தாலும் மனதினுள் ஒரு வித இனம் புரியா உணர்ச்சியினை வர வைக்கும் ராக்கிங் ரகளைகள்,காதல் கலாட்டாக்கள் என அனைத்து வகையான அம்சங்களையும் உள்ளடக்கிய முதற் பாதித் தொகுப்பாகவும், பின்னர் ஒரு 

மனிதன் தன் பாலியல் எனும் உணர்வின் மூலமாகவும், அடங்காத காமத்தின் வெளிப்பாடாகவும் எப்படியெல்லாம் சீர் கெட்டுத் திசை மாறி நிற்கிறான் என்பதனைச் சமூகத்திற்குச் செய்தியாகப் பிற் பாதியிலும் சொல்லி நிற்கும் அற்புதமான ஒரு தொடர் தான் இந்த மன்மத லீலைகள்.

சுருங்க கூறின், காலேஜ் வாழ்வில் பல பெண்களை அனுபவிக்க வேண்டும் எனத் துடிக்கும் ஒரு இளைஞன் (மதன்) காதல் லீலை செய்து, பின்னர் வசமாக ஒரு பெண்ணின் வலையில் மாட்டி (ஜமீலா) அவள் அன்பில் நனைந்து, மனந் திருந்தி; தான் தேடிப் போய் விருந்துண்ணும் பட்சிகளை விடத் தன்னைத் தேடி வரும் அன்னமே வெள்ளை மனம் உள்ளது எனப் புத்தி தெளிந்து அவளோடு வாழ வேண்டும் எனும் ஆவல் கொண்டவனாய்த் தம் திருமணத்திற்கு வேலியாகக நின்று வேரறுத்த மதத்தினை உதறித் தள்ளிக் காதற் திருமணம் செய்து இல்லற பந்தத்தில் இணைந்து கொள்கிறான்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் புலம் பெயர்ந்து சென்று திசை மாறிப் பல பெண்களிடம் தன் ஆசையினால் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் இக் கதையின் நாயகன் மதன் நிற்கும் போது, இனி மதன் திருந்துவானா? இல்லை தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவன் தண்டனை பெற்று வருந்துவானா? எனும் ஏக்க உணர்விற்கு விடை தரும் தொடர் தான் இந்த மன்மத லீலைகள்.

மதம் எனும் தடைக்கலைத் தூரத் தள்ளி வைத்து தம் வாழ்வே பெரிதென எண்ணித் திருமணம் செய்யும் காதலர்கள் ஊடாகப் பிரிவினையற்ற சமுதாயம் வேண்டும் எனும் உண்மையினையும், தீராத விளையாட்டுப் பிள்ளையாகப் பெண்களை நோக்கி அலையும் ஒரு திருமணமான இளைஞன் இறுதியில் அனைத்தையும் இழந்து தான் போடும் போலி வேசம் எல்லாம் கலைந்த பின்னர் தவிப்போடு நிற்பதனூடாக; "தான் தேடிப் போவோரை விடத் தன்னை நேசிப்போரில் தான் பாசம் அதிகம்" எனும் உண்மையினை அழகுறச் சொல்லி நிற்கிறது இந்த மன்மத லீலைகள். 

காதற் திருமணத்தின் ஒரு படி நிலையாக பெற்றோரைப் பிரிந்து நிற்கையில் தனக்குத் தன் குழந்தையும், கணவனும் உற்ற துணையாக இருப்பார்கள் என எண்ணிச் சமூகத்தில் பெணொருத்தி வாழும் போது, கணவனின் லீலைகளால் குழந்தையோடு கைவிடப்பட்டவளாய், தன் பெற்றோர், மாமனார் - மாமியாரால் வார்த்தைகளால் சூடு வாங்கி நிர்க்கதி நிலையில் நிற்கையிலும் நம்பிக்கையினைத் தவற விடாத ஒரு ஜீவனாக இங்கே ஜமீலா எனும் பெண் பாத்திரத்தினைப் படைத்து இத் தொடரின் மூலம் சமூகத்தில் கணவனால் கை விடப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையுடன் எப்படி வாழலாம் எனும் உள உரத்தினைப் வெள்ளிடை மலையாகச் சொல்லி நிற்கிறார் கதாசிரியர்.

கதாபாத்திரப் படைப்புக்கள் ஒவ்வொன்றும் இத் தொடரின் உண்மைச் சம்பவத்திற்குச் சிறிதும் பங்கம் ஏற்படா வண்ணம் படைக்கப்பட்டிருப்பதும் தொடருக்கு கிடைத்திருக்கும் பெரு வெற்றி எனலாம். யதார்த்தம் கலந்த உரையாடல்கள், உள்ளதை உள்ள படி சொல்லும் அப்பழுக்கற்ற வசன அமைப்புக்கள், வட்டார மொழிச் சொற்கள், இயற்கை அழகினை மனக் கண் முன்னே கொண்டு வரும் படைப்பாளியின் கமெராக் கைவண்ணம் முதலியவை இத் தொடருக்கு அழகு சேர்த்திருக்கிறது. 

இவை அனைத்திற்கும் அப்பால் இலக்கியச் சுவை குன்றா வண்ணம் இத் தொடரை நகர்த்த வேண்டும் எனும் படைப்பாளியின் ஆவலுக்குத் தீனி போடும் இலக்கிய வசன மேற்கோள் குறிப்புக்கள்; ஆங்காங்கோ வாசம் வீசும்   அந்தரங்கச் சுவையோடு வெளி நாட்டு மதுக் கோப்பைகளின் வெளிப் புறத்தில் பட்டுத் தெறிக்கும் வெள்ளைக்கார மாதுக்களின் அங்க வர்ணனைகள், தொழில் நுட்பத்தின் உதவியோடு திசை மாறும் மதனின் லீலைகளை அம்பலப்படுத்தும் டெக்னாலஜி விசயங்கள் எனப் பல சுவையான அம்சங்களினூடாக இத் தொடருக்குச் சுவை கூட்டியிருக்கிறார் செங்கோவி அவர்கள். 

தமிழகம், நோர்வே என இரு வேறுபட்ட தளங்களைப் படைப்பின் மையப் பகுதியாகக் கொண்டு நகரும் இத் தொடர், ஆங்காங்கே அழகு கொஞ்சும் அன்னைத் தமிழ்க் கவிதை மூலம் அசத்தி நிற்கிறது. அதற்கு எடுத்துக் காட்டாகப் பின்வரும் கவிதையினைக் குறிப்பிடலாம்.

செவ்வான நிறத்தில்
மனம் மயங்குகிறது.
குளத்தில் இருமீன்களும்
துள்ளி அலைகின்றன.
இருபுறம் கனிந்திருக்கும்
ஆப்பிள் மீது வெண்பனி வேறு.
எங்கே என்கிறாய் – உன்
முகத்தில் தானடி
இவையனைத்தும்!

ஒவ்வோர் அங்கத்திலும் சிறப்பான கவிதைகளைக் கொடுத்திருக்கும் கதாசிரியர், பதின் மூன்றாம் பாகத்தின் பின்னர் இந்த நவீன யுகத்தில் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுப்பதிலும் பஞ்சம் நிலவுகிறதே எனும் ஆதங்கத்தினை வர வைத்திருக்கிறார். 

இலக்கியங்கள் மீதான தன் காதலினையும், வாசகர்களிற்கு சலிப்பின்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று இலக்கியக் குறிப்புக்களை வழங்க வேண்டும் என ஆவல் கொண்டவராய் ஆங்காங்கே சங்க இலக்கியங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில வரிகளை எடுத்து மேற்கோளாக காட்டியிருப்பதும் இத் தொடர் மூலம் பரந்து பட்ட விடயப் பரப்பெல்லையினை அலசும் பக்குவத்தினையும், தேடல் மூலம் தீராத தமிழ்த் தாகத்தைத் தீர்த்துத் தமிழ்ச் சுவையினைப் பருகலாம் எனும் உண்மையினையும் உணர்த்தி நிற்கிறார் செங்கோவி அவர்கள். பின் வரும் வரிகள் இதற்குச் சான்று பகர்கின்றது.

"அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது. அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான். 

இத் தொடரின் ஊடாக பல்கலைக் கழக வாழ்வில் எம் நெஞ்சில் பசு மரத்தாணியாகப் பதியமிட்டுள்ள நினைவுகள் மீட்டப்பட்டு எம் மனங்கள் யாவும் காலேஜ் வாசலை நோக்கி மீண்டும் சிறகடித்துப் பறந்து செல்லும் என்பது ஒரு வாசகனாக இது வரை காலமும் இத் தொடரோடு பயணித்த எனது எண்ணத்தின் வெளிப்பாடாகும்.

ஒரு மனிதன் தான் எப்படி வாழ வேண்டும் எனும் நினைவினைச் சுமக்க விரும்புகிறானோ அவனுக்கு இத்தகைய வழிகளை நீ நாடக் கூடாது எனும் அறிவுரையிச் சொல்லி நிற்கும் இத் தொடரானது கூடவே பெற்றோருக்குத் தம் பெண் பிள்ளைகள் திசை மாறிச் செல்ல விடாது கண்ணியதோடு வளர்க்க வேண்டும் எனும் பொறுப்பு மிக்க உணர்வினை இக் காலத்தில் தட்டியெழுப்பும் ஒரு அலாரமாகவும், திசை மாறிச் சென்றால் வாழ்க்கையில் நாம் எத்தகைய நிலையினை அடைந்து கொள்வோம் எனும் அனுபவ வெளிப்பாட்டியினையும் தன்னகத்தே கொண்டு அழகுற மிளிர்ந்து நிற்கிறது இந்த மன்மத லீலைகள்.

ஒரு வாசகனாக இப் படைப்பினை நீங்கள் அணுகினால் உங்கள் உள்ளத்தைத் தித்திக்க வைக்கும் ஒரு தீந் தமிழ் சுவை கலந்த சிறப்பான தொடராக இம் மன்மத லீலைகள் அமைந்திருக்கும்!

ஒரு விமர்சகனாக விரல் கொண்டு வருடினால் உங்கள் உள்ளத்தில் பல தேடல்களை ஏற்படுத்தி "அடடா இத்தனை வியத்தகு விடயப் பரப்பெல்லைகள் நிறைந்த தொடரா? இது!" என உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இத் தொடர்!

நேசமுடன்,
செல்வராஜா நிரூபன்.
நட்டாங்கண்டல்,
வன்னி மாவட்டம்,
இலங்கை.
மேலும் வாசிக்க... "மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள் - பதிவர் நிரூபனின் விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 24, 2011

தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?

வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.

எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.

இப்படி ஒரு பத்து நாள் தொடர்ச்சியா செலவழிக்காம இருந்தா, ஆட்டோமெடிக்கா சிக்கனமாய் இருப்பது எப்படி-ன்னு நாம தெரிஞ்சிக்கிறோம். செலவழிக்காமல் சந்தோசமாய் இருக்கும் வழி முறைகளையும் நாம அறிஞ்சுக்கிறோம். இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்.

ஸ்டார்ட்....! :

மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும். ‘அய்யோ காசு?”ன்னு பதறக்கூடாது. பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.

நல்ல ஏசி வச்ச காரை வாடகைக்கு எடுத்துக்கோங்க. தங்கமணியைக் கூட்டிக்கிட்டு தலை தீபாவளிக்குக் கிளம்புங்க.(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)

கார்ல போகும்போதே டிரைவர்கிட்ட ‘நான் தலை தீபாவளிக்குப் போறேன்’-ன்னு தெளிவாச் சொல்லிடணும். ஜல்ல்லுன்னு கார்னு போய் இறங்குறீங்க. இப்போத் தான் உஷாரா நடந்துக்கணும். அங்க போய் இறங்குனதும், டிரைவரைத் திரும்பியே பார்க்கக்கூடாது. 

‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.

எண்ணெய்க் குளியல் :

குளிக்கறதே கஷ்டமான விஷயம், இதுல எண்ணெய்க்குளியல் வேறயான்னு அலுத்துக்கக்கூடாது. குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க. வேற வழியே இல்லை..ஓசி ட்ரெஸ் வேணுமா, இல்லியா? அப்போ குளிங்க.

இன்னொரு முக்கியமான விஷயம்.உங்களைக் குளிக்கக் கூப்பிடும்போது ஸ்டைலா கூப்பிடணும்னு முதல்லயே தங்கமணிகிட்டச் சொல்லிடுங்க. எப்படின்னா “ஹாட் வாட்டர் ரெடி..கம்யா..டேக் பாத்யா”.

இதைக் கேட்டதும் மாமனார்-மாமியார் உச்சி குளிர்ந்திடும். ‘அடி ஆத்தி..இங்க இருந்தவரைக்கும் ‘யெம்மா..வென்னி சுட்ருச்சாம்மா?’ன்னு கேட்ட புள்ள, இப்போ என்னென்னமோ பேசுதே..படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.

ட்ரெஸ் :

நீங்க மீட்டர் 50 ரூபாய்க்கு விக்கிற துணில சட்டை நப்பித்தனமான ஆசாமியா இருக்கலாம். ஆனால் இப்போ நீங்க பீட்டர் இங்க்லேண்ட், சியரோ மாதிரி கம்பெனி சட்டை போடற நல்ல காலமும் உங்க வாழ்க்கையில் வந்தாச்சு. அதுக்காக அவங்க ட்ரெஸ்ஸைக் கொடுக்கும்போது ஈன்னு இளிச்சுடக்கூடாது. கெத்தா “ஓ..திஸ் கலர்?..ஓகே..”-ன்னு சொல்லணும். 

சாப்பாடு :

தல தீபாவளில கஷ்டமான பகுதி இது தான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரம் செஞ்சு வச்சிருப்பாங்க. உடனே காய்ஞ்ச மாடு மாதிரி பாஞ்சிரக்கூடாது. பொண்ணு பார்க்கப்போகும்போது, எப்படி ஆக்ட் விட்டீங்களோ அப்படியே நாசூக்கா. லைட்டா சாப்பிடணும்.”அப்போ மீதி?’ன்னு அலறாதீங்கய்யா..சொல்றேன்..

சாப்பிடும்போதே “இந்தப் பணியாரம் யார் செஞ்சது?”ன்னு கேட்கணும். “இது எங்க பாட்டி செஞ்சது”ன்னு பதில் வந்தா “ஓ..ஐ லைக் இட்..நல்லா இருக்கு”ன்னு ஒரு அருமை கமெண்ட் சொல்லிட்டு, ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட்டுட்டு வச்சிடணும். அப்படியே எழுந்து கெத்தா ரூமுக்குள்ள போயிடணும்.

இப்படிப் பாராட்டிட்டுப் போனா பாட்டி விட்ருமா? உடனே உங்க தங்கமனிகிட்ட “அவரை இன்னும் சாப்பிடச் சொல்லு..இதையும் எடுத்துக்கோ”ன்னு தனியா கொடுத்துவிடுவாங்க. அப்புறம் என்ன, நீங்க ரூமுக்குள்ள மொக்கு மொக்குன்னு மொக்குறதைப் பார்த்துட்டு, தங்கமணியே ஊருக்கு வர்ற வரைக்கும் தனி கவனிப்பு கவனிச்சுடுவாங்க.

அப்புறம் கறி எடுக்கும்போதும் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்பாங்க. நீங்க மாமனார்கிட்ட நேரா எதுவும் சொல்லக்கூடாது. அப்படியே தங்கமணி பக்கம் திரும்பி “ஐ லைக் குடல் கறி..பட், யு நோ..ஐ அம் இன் டயட்..சோ யு ட்ரை சம்திங் எல்ஸ்’ன்னு சொல்லிட்டு, நகர்ந்திடணும். மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.


பட்டாசு :
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.

ஊர் திரும்புதல் :

எப்பவும் ஓசிச்சோறே கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..ஆனாலும் என்ன செய்ய..விதி வலியது இல்லியா..ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வரவும், கிளம்புங்க. இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.

டிஸ்கி-1 : இது சொந்த அனுபவம் அல்ல.
டிஸ்கி-2 : இது ஆணாதிக்கப் பதிவு அல்ல.
டிஸ்கி-3 : இது பெண்ணாதிக்கப் பதிவும் அல்ல.
டிஸ்கி-4: எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


மேலும் வாசிக்க... "தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

206 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, October 20, 2011

செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)

சென்ற வாரம் ஃபேமிலி ப்ளானிங் பற்றிய பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை யாம் மெச்சினோம். பார்த்திபன் தாரத்தைப் பற்றி மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் நீங்கள் காட்டும் ஆர்வம் எமக்கு ஊக்கமளிப்பதால்.....
பொருளாதாரத்தில் நமக்குப் பிடிக்காத வார்த்தை செலவு தான். வரவு மட்டுமே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆனாலும் என்ன செய்வது, நமக்கு வரும் வரவு என்பது ஒருவருக்கு செலவு தானே?

செலவைக் குறைப்பது என்று முடிவு செய்தவுடன் பலரும் செய்வது உடனே பயங்கர சிக்கனவாதியாக ஆகிவிடுவது. ஒன்று, தாராளமாகச் செலவளிப்போம், அல்லது நேர் எதிர்முனைக்குச் சென்று கஞ்சனாக ஆகிவிடுவோம். ஆனால் இப்படி இறுக்கிப் பிடிப்பது ரொம்ப நாள் நீடிக்காது. கொஞ்சநாளிலேயே திரும்பவும் கன்னாபின்னாவென்று செலவளிக்க ஆரமபித்துவிடுவோம். எனவே நிதானமாக இதை(யும்) அணுகுவது எப்படி என்று பார்ப்போம்.

சிக்கனமாக குடும்பம் நடத்தவும் சேமிக்கவும் அடிப்படைத் தேவை, நாம் செலவளிக்கும் பணத்திற்கு தெளிவாக கணக்கு வைத்திருப்பது. அது ஐம்பது பைசாவாகவே இருந்தாலும் கணக்கில் வையுங்கள். ’என்னய்யா இது..நப்பித்தனமா இருக்கே’ன்னு யோசிக்கிறீர்களா..உங்களுக்குத் தெரிந்த பணக்காரர்கள்/பிஸினஸ்மேன் பலரும் அப்படி துல்லியமாக கணக்கு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தான். எனக்குத் தெரிந்த ஒரு பிஸினஸ்மேன் பழைய பேப்பர்காரரிடம் ஒரு ரூபாய்க்கு அரைமணிநேரம் வாதாடியதைப் பார்த்திருக்கிறேன். 

உங்கள் செலவுகளைக் கணக்கு வைப்பது முக்கியம். அதற்குத் தேவை ஒரு எக்செல் ஷீட். தினமும் இரவில் தூங்கப்போகும் முன் கணக்கு எழுதுவதையும் முக்கிய வேலையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மாதிரி எக்செல் கீழே :
மூன்று மாதங்களுக்கு எதையுமே குறைக்க முற்படாமல், வழக்கம்போல் வாங்கி வாருங்கள். அதை இங்கே எழுதியும் வாருங்கள். மூன்றாவது மாத முடிவில், குடும்பத்தோடு உட்கார்ந்து என்ன செலவு செய்திருக்கிறோம்-மூன்று மாத உழைப்பில் எவ்வளவு மீதம் ஆகியுள்ளது என்று பாருங்கள். உங்களுக்குத் தெரியும்,உங்கள் பணம் எங்கெல்லாம் வீணாகப் போகிறது..அதை எப்படித் தவிர்ப்பது என்பது!

மேலே உள்ள ஷீட்டில் எழுதும் முன்பு, தினசரிச் செலவுகளை இன்னும் தெளிவாக தனியாக எழுதிக்கொள்வது நல்லது. அதற்கு இந்த மாதிரியான ஷீட் உதவும் :
உங்களுக்கு ஏற்றபடி இந்த இரு அட்டவணைகளையும் மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது முதல் ஷீட்டைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு மாதத்தின் முதல்நாளில் அல்லது சம்பள நாளில் உங்கள் மொத்தக் கையிருப்பு ( பேங்க் பேலன்ஸ், கையில் உள்ள கேஷ் போன்ற அனைத்தும் சேர்த்து). இந்த அட்டவணையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 
முதலாவது ’ப்ளான்’. இதில் இந்த மாதம் தோராயமாக என்னென்ன வரவு மற்றும் செலவு வரும் என்று குறித்துக் கொள்ளுங்கள். (சில மாதங்கள் கழித்து இதை 90% உங்களால் அனுமானிக்க முடியும்)

இரண்டாவது பகுதியில் அன்றாட வரவு/செலவுகளின் தொகுப்பை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றாற்போல் இதனை மாற்றிக்கொள்ளுங்கள். மாதக் கடைசியில் ஆக்சுவல் பகுதியில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசமே அந்த மாத உங்கள் சேமிப்பு. இந்த அட்டவணையில் அது 3000 ரூபாய் தான். ’இப்படி மாதம் மூவாயிரம் சேர்த்து என்னிக்கு உருப்பட’-என்று யோசனை வருகிறதல்லவா? கரெக்ட், அந்த யோசனை தான் உங்களை மேம்படுத்தும், முன்னேற்றும்.

அடுத்து உள்ள அசெட் பகுதி உங்கள் கைவசம் உள்ள பணத்தினைக் காட்டும். லையபிலிட்டி பகுதி உங்கள் கடன்களைக் காட்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பாசிடிவாக இருந்தால், நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல், நீங்கள் உங்கள் செலவுகளை ரொம்பவே கண்காணிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இந்த மாதத்திற்கான க்ளோசிங் பேலன்ஸ்; அதுவே அடுத்த மாதத்திற்கான ஓப்பனிங் பேலன்ஸ் ஆகும்.

இங்கே சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் ,என் சொந்த வாழ்க்கையில் நான் பயன்படுத்தி வெற்றி கண்டவையே. அதையே உங்களுக்கும் சொல்கின்றேன். இங்கே சொல்லப்படுபவை உங்களுக்கும் பயன்பட்டால், அதைவிட நமக்கு மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை!

விரைவில் வேறொரு டாபிக்குடன் பொருளாதாரம் பற்றிப் பார்ப்போம். அதுவரை...

வணக்கம்!

மேலும் வாசிக்க... "செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

213 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, October 19, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_1

பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை நான் பிரசுரிப்பதில்லை. அது வீண் பகட்டாகத் தெரியும் என்பதால், பொதுவில் வைக்க எனக்குத் தயக்கம் உண்டு.

ஹன்சிகா ஸ்டில்லில் ஆரம்பித்து, ஓஷோ புத்தகங்கள் வரை எனக்கு வாசக நண்பர்கள் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் என் மதிப்பிற்குரிய பெரியவர் ஒருவரிடம் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மின்னஞ்சல் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு நான் பதிலளிக்க, விவாதம் நீண்டு கொண்டே சென்றது.

முடிவில் அதைப் பொதுவில் வைக்கும்படி, விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும் கேட்டுக்கொண்டார்கள். இந்த விஷயம் பற்றி, படிப்போரிடையே மேலும் பல ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தப் பகிர்வின் குறிக்கோள்.


பின்னூட்டத்தில் வசைச் சொல் தவிர்த்து, விவாதம் தொடர்ந்தால் மகிழ்வேன் :
-------------------------------------------------------------------------------------------------------------

செங்கோவி அவர்களே!

வணக்கம்!

காந்திஜி பற்றிய உங்க‌ள் பதிவினைப் பார்த்து உங்கள் மேல் ஒரு பரிவும், மரியாதையும் ஏற்பட்டது. வகுப்பறையில் "கோட்சேயின் வாக்குமூலம்" பற்றி நான் இட்ட பதிவில் தங்களுடைய பின்னூட்டமே உங்கள் மனவோட்டத்தைக் காண்பித்தது.

தங்க‌ள் எழுத்துக்களில் காணப்படும் பார்ப்பன எதிர்ப்புக்கு ஆன காரணிகளை நான் அறியத் தாருங்கள். நான் அந்த வகுப்பைச் சார்ந்தவனே!சுய விமர்சனத்திற்காகவே கேட்கிறேன்.எங்க‌ளிடம் தவறுகள் இருப்பின் மாற்றிக் கொள்ளவும் இது ஏதுவாகும்.இது தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் அனுப்பினாலும் சரி.பொதுவில் ஒரு விவாதமாகச் சொன்னாலும் சரியே.

கடந்த 44 ஆண்டுகளாக(கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்), அந்தணர்களுக்கு எந்த விதச் சலுகையும் இல்லாமலேயே இருந்துள்ளது.அவர்களும் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று சோற்றுகாகத் தஙளுடைய எல்லா அடையாளங்க‌ளயும் அழித்து விட்டு ஊர் ஊராகவும், நகரம் நகரமாகவும்,நாடு நாடாகவும் சிதறிப் போய் விட்டனர். 


இன்னும் அவர்கள் மீது வைத்துள்ள வெறுப்புக்கான காரணத்தை அறியலாமா?

என் தந்தையார் காந்தீய நிர்மாணப்பணி செய்தவர்.சிறை சென்ற‌ தியாகி. சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் விருந்தோம்பல் செய்தவர் என் தாய்.எனவே தாங்கள் என்னிடம் பிற அந்தணர்களிடம் காட்டும் தயக்கத்தைக் காட்ட வேண்டாம்.

நீங்கள் காந்தியிடம் அணுகும் முறையே, நீங்கள் ஞாயத்திற்குக் கட்டுப் படக்கூடியவர் எனக் காட்டுகிறது.அதனால்தான் எழுதினேன். விருப்பமும், நேரமும் இருப்பின் தொடரவும்.

நன்றி வணக்கம்

****
-------------------------------------------------------------------------------------------------------------

ஐயா,

முதலிலேயே சொல்லி விடுகின்றேன், நான் பிராமணர்கள் மேல் துவேஷம் கொண்டவன் அல்ல. நீங்கள் உபயோகிக்கும் பார்ப்பன/பார்ப்பான் போன்ற வார்த்தைகளைக் கூட நான் என் பதிவுகளிலோ அல்லது வேறெங்குமோ உபயோகித்ததில்லை தாங்கள் பிராமணர் என்பதையும் வகுப்பறையிலேயே நான் அறிவேன். ஆனாலும் தங்கள் மீது நான் மதிப்பு கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

நான் எதிர்ப்பது பிராமணீயம்/பார்ப்பனீயம் என்ற சொல்லால் அழைக்கப்படும் பிறப்பு அடிப்படையிலான தகுதிப் படுத்தலையே. நான் எனது பதிவில் ஒரு பின்னூட்ட நண்பரிடம் ‘பிராமணர்களிடம் மட்டுமா பார்ப்பனீயம் உள்ளது’ என்று வெளிப்படையாகவே கேட்டுள்ளேன்.

பிறப்பு அடிப்படையில் பேதம் பார்க்கும் பிராமணர்களை மட்டுமல்லாது, வன்னியர்/நாயக்கர்/நாடார்/தேவர்/பிள்ளைவாழ் ஜாதியைச் சேர்ந்தோரையும் கண்டிருக்கிறேன். 

ஒரு வன்னியர்/தேவர் என்பவர் தாழ்த்தப்பட்டோர் தவிர மற்றோரிடம் பெரிதாக பார்ப்பனீயத்தைக் காட்டுவதில்லை. அதனால் அது எல்லோருக்கும் பெரிதாக தெரிவதும் இல்லை. பிராமணர்கள் எல்லா ஜாதியினரிடமும் பார்ப்பனீயத்தைக் காட்டுவதால், சமூகம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்கிறது.

பிராமணர்களின் ஜாதித் துவேஷத்தை, வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்காதவர் தமிழகத்தில் குறைவே. அதற்கு என்னையே உங்களுக்கு உதாரணமாகச் சொல்வேன்.

என் கல்லூரி நண்பர், பிராமணர். சென்னையைச் சேர்ந்தவர். நாங்கள் கால்லூரியில் படிக்கும்போது இன் - ப்ளாண்ட் ட்ரெய்னிங்கிற்காக சென்னை சென்று, அவர் ஏரியா அருகில் தங்கியிருந்தோம். ஒருநாள் தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்துச் சென்றார். அவரது தாயும், பாட்டியும் இலையில் சோறு பரிமாறினார்கள். நண்பருக்கும், அவரது தந்தைக்கும் மட்டும் தட்டில் சாப்பாடு. 


அதை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்து எழுந்தோம். அப்போது அவரது தாயார் நாங்கள் சாப்பிட்ட இலையை எடுக்கும்படியும், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடும்படியும் சொன்னார். நாங்கள் அதிர்ந்தோம். வேறுவழியின்றி, இலையைக் கையில் ஏந்தியபடி 4 வீடு தள்ளி தெருமுனையில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டோம். திரும்பி நாங்கள் வந்தபோது, வீடு மொழுகப்பட்டிருந்தது.

என் தாய்-தந்தையர் படிக்காதவர்கள். ஆனால், நான் எனது பள்ளி நண்பர்களை எப்போது அழைத்துச் சென்றாலும் ’என்ன ஜாதி’ என்று கேளாது உணவிட்டு விருந்தோம்பல் செய்வார்கள். சில நாட்களில் நண்பர்கள், என் வீட்டில் இரவில் படிப்பதற்காகத் தங்குவதும் உண்டு. உறவுகள் முணுமுணுத்தாலும், வீட்டிற்கு வந்தோரை என் தாய்-தந்தையர் அவமானப்படுத்தியதில்லை. 

அப்படி ஒரு பின்புலம் கொண்ட எனக்கு, சென்னை போன்ற நாகரீக நகரத்தில், பிராமணக் குடியில் பிறந்தோர் கொண்டிருக்கும் மன அழுக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. காந்தி சொன்ன தீண்டாமை பற்றிய கருத்துக்களையும் அப்போதே நான் முழுதாக புரிந்து கொண்டேன். 

எங்கள் ஊரில் பிராமணர்கள் கிடையாது. எனவே என் கல்லூரிக் காலம் வரை பிராமணர்களைப் பற்றி எந்தவொரு கருத்தும் எனக்கில்லை.அந்த சம்பவத்தை பிறரிடம் சொல்லி, வருத்தப்பட்ட போது, பலரும் அதே போன்று பல்வேறு இடங்களில் தாங்கள் பட்ட அவமானத்தைச் சொன்னார்கள். ஒரு கிராமத்தில் ஒரு பிராமணச் சிறுவனைக்கூட ‘சாமி’ என்று தான் அழைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதைச் சொன்னார்கள். 

அதன்பின் நான் பெரியாரைப் படிக்க ஆரம்பித்தேன். அவரது அரசியலுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. ஆன்மீகரீதியில் ஓஷோவை ஏற்கனவே படித்திருந்த என்னை, பெரியார் ஈர்க்கவில்லை. ஆனால் ஜாதி விஷயத்தில்,  என் பார்வை மாறியதில் அவர்களின் தாக்கத்தையும் காந்தியின் தாக்கத்தையும் இப்போது நான் உணர்கின்றேன்.
எப்படி பிற ஆதிக்க ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி வெறியர்கள் இல்லையோ, அதே போன்று எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். எனக்கு நல்ல பிராமண நண்பர்களும் உண்டு. எனவே நான் ஒட்டுமொத்தமாக எல்லா பிராமனர்களின் மீதும் வெறுப்பு கொள்வதில்லை. 

தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது என்று நம்புவதும், பிற ஜாதியினரை விட தான் உயர்ந்தவர்கள் என்று நம்புவதும், ஈழப்படுகொலை போன்ற பாதகச்செயல்களில் மனிதநேயத்துடன் மனிதர்களுக்காக இரங்காததுமே பெரும்பாலான பிராமணர்களின் தவறு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அதுவே.

துக்ளக் சோ-வும் அத்தகைய துவேஷம் கொண்டவரே. அவரைப் பற்றி எனது சில பதிவுகளில் நான் தாக்கி எழுதியதால், ஒட்டுமொத்த பிராமணர்கள் மேல் நான் துவேஷம் கொண்டவன் என்று எண்ணிவிட்டீர்களோ? 

இந்து மதத்தின் மீதும், நம் முன்னோர்களின் மீதும் மரியாதை உள்ள சராசரி இந்தியன் நான், அவ்வளவே!

அன்புடன்,
செங்கோவி
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள செங்கோவி,

///சாப்பிட்டு முடித்து எழுந்தோம். அப்போது அவரது தாயார் நாங்கள் சாப்பிட்ட இலையை எடுக்கும்படியும், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடும்படியும் சொன்னார்.///

நீங்கள் சென்று உணவு சாப்பிட்ட வீட்டு பாட்டியை மாற்ற முடியுமா? உங்க‌ள் நண்பரே அப்ப‌டித்தான் என்றால் அவருக்கு ஆலோசனை அவசியம்.அவர் தன் வீட்டு நடைமுறை தெரிந்து, பாட்டியிடம் பேசி தானே விருந்தினரின் இலைகளை எடுத்துப் பாட்டியையும் திருப்தி செய்து, விருந்தினரையும் நோக அடிக்காமல் சமாளித்து இருக்கலாம்.பாவம் !


அவருக்கே கூட இது முதல் அனுபவமாக இருந்திருக்கக்கூடும்.இப்ப‌டி நடக்கும், அதை நீங்கள் தவறாக அவதானிப்பீர்கள் என்று புரிதல் இல்லாத வயது. கல்லூரியில் படித்த போது அல்லவா!என்ன 21 வயது இருக்கும். அனுபவம் பத்தாது. 

சாப்பிட்ட இடத்தை அவர்களே சுத்தம் செய்து விட்டார்கள் அல்லவா?ந‌ல்ல வேளை! அதையும் உங்க‌ளை செய்யச் சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

நான் வேலை பார்த்த அலுவலகக் கேண்டீனில்‍=நாடார் கிறித்துவர் நிர்வாகம்‍‍=இன்றளவும் இலை நாங்களே எடுக்க வேண்டும்.

இன்று வெளிநாட்டுக்குப் போகும் தன் பிள்ளை, கிடைக்கும் உணவுக்குத் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சாப்பிட்டுப் பழகுமாறு பயிற்றுவிக்கும் பிராமணப் பெண்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

தன்னை விடக் குறைந்த சம்பளம் பெரும் பிராமண இளைஞ‌னைத் திருமணம் முடிக்க மறுக்கும் பார்ப்பின யுவதிகள் பெருகி விட்டார்கள்.கலப்புத் திருமணம் பிராமணப் பெண்களே அதிகம் செய்கிறார்கள். 

நல்லது. மீண்டும் சந்திப்போம்.

-- *****


(தொடரும்)


டிஸ்கி : மின்னஞ்சலில் இது சம்பந்தமாக நிறைய பேசியுள்ளதால், பின்னூட்டத்திலும் ”விவாதிக்க” நான் விரும்பவில்லை. இது தீராத விவாதம் என்பதையும் நானறிவேன். நன்றி.
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

92 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, October 16, 2011

பன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு பய(ங்கர) டேட்டா...


அறிவிப்பு : சொல் ஒன்று-செயல் ஒன்றாக இருப்பது கூடாது என்பதால், இனி தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்....சாரி ஃப்ரெண்ட்ஸ்!

பெயர்         : பன்னிக்குட்டி ராம்சாமி

புனைப்பெயர் : பதிவுலக கடவுள் (ஒரிஜினல்)

தொழில் : கமெண்ட் எழுதுவது, (போரடித்தால் பதிவும்!)


உபதொழில் : கெடுப்பது, பிரியாமணியை அல்ல....பதிவர்களின் பொழைப்பை


உப உபதொழில் : குத்துவது (உள்குத்து அல்ல..டைரக்ட் அட்டாக்)


தலைவர் : கவுண்ட மணி

தலைவி : ஷர்மிளி

துணைத் தலைவிகள் : ஷகீலா, ஹேமா, ரேஷ்மா


பொழுதுபோக்கு : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு : பிற பதிவர்களின் பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு : குப்பையை கிளறி ‘மணத்தை’ பரப்புதல்


வயது                        : அது..அது வந்து..அது..அக்காங்......


பலம்                        : ஒன்னே ஒன்னு....தைரியம்


பலவீனம்                : அதுவும் ஒன்னே ஒன்னு தான்....உண்மையை யோசிக்காம போட்டுடைப்பது


நம்பிக்கை                : குப்பையும் மணக்கும்


பயம்                        : ஹி...ஹி..


லட்சியம்                : தப்பை தட்டிக் கேட்பது (ச்சே..ச்செ..பெட்ரூம் கதவை இல்லீங்க..இது வேற தப்பு)


நீண்டகால சாதனை : கும்மிப் பதிவராக மட்டுமே வெளியில் காட்டிக்கொள்வது


சமீபத்திய சாதனை : ஒரே நாளில் பலரை தமிழ்மணத்தில் இருந்து தூக்கியது


இதுவரை மறந்தது : ஆபாச திரட்டியை


இனி மறக்க வேண்டியது : வந்து விழும் ஆபாச பின்னூட்டங்களை


பாடாய் படுத்துவது : கை அரிப்பும், அதனால் எழுதும் பதிவுகளும்


இதுவரை புரியாதது : அதுக்காக இதுவா? இதுக்காக அதுவா?


விரும்புவது                   : மான ரோசம் உள்ளவன் அங்க இருக்கக்கூடாது


விரும்பாதது                   : ’தூக்கி’யின் மெயில்களை



எச்சரிக்கை :
 பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே அல்ல. 

உதவிக்கரங்கள்  (ஒன்னுமே புரியாதவங்களுக்கு):





மேலும் வாசிக்க... "பன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு பய(ங்கர) டேட்டா..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

242 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.