Sunday, February 27, 2011

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : விமர்சனம்

டிஸ்கி: எனக்கு கிரிக்கெட்டைப் பத்தி ஒன்னும் தெரியாது. ஏதோ நான் உண்டு, சினிமா விமர்சனம் உண்டு-ன்னு இருந்தேன். இப்போ உலகக்கோப்பை போட்டி நடக்குறதால டப்பா படம்தான் வருது. இப்போ என்னாச்சுன்னா, விமர்சனம் எழுதாம கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு..அதான் துணிஞ்சு இன்று நடந்த மேட்ச்சு-க்கே விமர்சனம் சுடச்சுட இங்கே ..

லண்டனிலிருந்து இந்தியா வந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் விளையாடும் மேட்ச், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 11 பேர் இணைந்து ஒரே இடத்தில் விளையாடும் மேட்ச் என உலகளாவிய அளவில் படுபயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மேட்ச் இது!
மேட்டர் என்னன்னா, இங்கிலாந்துல இருக்குற 11 பேருக்கு கிரிக்கெட் விளையாடி கப் வாங்கணும்னு ஆசை. அதேபோல இந்தியாவில் டூத் பேஸ்ட், காம்ப்ளான், டாய்லட் க்ளீனர் போன்ற விளம்பரங்களில் நடித்து வாழ்க்கையை ஓட்டும் 11 பேருக்கும் அதே கப்பை வாங்கணும்னு ஆசை. யாரு ஜெயிச்சாங்கிறதை ஏகப்பட்ட விளம்பரங்களோடு சொல்லியிருக்காங்க. 

முதல் சீனிலேயே இரு அணி கேப்டன்களும் அம்பயரிடம் வர அவர் டாஸ் போட்டு இந்தியா டாஸில் ஜெயித்ததாகச் சொல்கிறார்.’மேட்ச்சே அவ்வளவுதானா..இந்தியா ஜெயிச்சிருச்சா..அப்போ மீதி 10+10 பேரு எதுக்கு வந்தாங்க’ன்னு நாம யோசிக்கும்போதே பேட்டிங் பண்ணத்தான் டாஸ் போட்டாங்கன்னு தெரியுது..அப்புறம் என்ன அதகளம் தான்!

முதல் ஜோடியா சேவாக்கும் சச்சினும் இறங்கிறாங்க. அடடா, மறுபடியும் நடுநிசி நாய்களா-ன்னு நீங்க யோசிக்கிறது புரியுது. அவங்க பேட்டிங் பண்ணத்தான் ஜோடியா இறங்குறாங்க. அப்படியெல்லாம் பொது மைதானத்துல பண்ணிட முடியுமா? 

வெள்ளைக்காரத் துரைங்க பந்தை ஒரு மாதிரி சுத்தி போடுதாங்க..நம்மாட்கள் அதை அடிக்கிறாங்க..இப்படியே முதல் பாதி போகுது. இண்டெர்வல் விடும்போது இந்தியா 338 ரன் எடுத்து இருக்கு. அடுத்து இங்கிலாந்துக்காரங்க அதை விட அதிகமா எடுத்தாங்களா..முடிவு என்னாச்சுன்னு முதல் பாதியை விட விறுவிறுப்பாச் சொல்றாங்க.
மேட்ச்சுக்கு இடையே சிறு ஓய்வு எடுக்கின்றனர். அப்போது ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்தனர். பொதுவாக அதைத் திறந்தால் மல்லிகா ஷெராவத்தோ ரகசியாவோ தலையில் மட்டும் முக்காடு போட்டபடி எழுந்து, ஒரு குத்தாட்டம் ஆடுவது வழக்கம். இதில் அந்த நல்ல சான்ஸையும் மிஸ் பண்ணிவிட்டார்கள். வெறுமனே வாட்டர் பாட்டிலும் கூல்ட்ரிங்ஸும் உள்ளேயிருந்து வருவதைப் பார்த்தபோது கடுப்பாக இருந்தது.

இந்த மேட்ச்சோட மிகப் பெரிய குறையே ஆம்பிளைங்க மட்டுமே ஆடுறது தான்..பொதுவாவே நமக்கு ஆம்பிளைங்களைப் பிடிக்காது. என்ன ஆளுங்க... மூஞ்சியில முடி முளைச்ச பயலுவ..அதுவும் 22 பேரைத் தொடர்ந்து 7 மணி நேரம் பார்க்குறதுங்கிறது கொடுமை தான். எஸ்.ஏ.சந்திரசேகர் நம்ம டாகுடரையும் யுவராணியையும்(போட்றா படத்தை!) வச்சு கபடி மேட்ச் எடுத்த மாதிரி, இங்கேயும் 11 பொம்பளங்களைக் களமிறக்கி இருந்தா மேட்ச் கமர்சியல் ஹிட் ஆகியிருக்கும்..ஜஸ்ட் மிஸ்!
விரலா..உரலா!
இடையிடையே ஆடியன்ஸா வந்திருக்கிற துணை நடிகைகளைக் காட்டினாலும், நம்ம எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யலை. இடையிடையே வரும் விளம்பர ஃபிகர்களும் மேட்ச்சோட/மனசோட ஒட்டல.

மேட்ச்சுக்கு பிண்ணனி இசையோ, பாடல்களோ கிடையாது. பிண்ணனியில் வர்றது ஒரு ஆளோட (அதுவும் ஆம்பிளை..ச்சே!) கமெண்ட் மட்டும் தான். என்ன இருந்தாலும் நம்ம மந்த்ரா பேடி மாதிரி வருமா..பாத்ரூமுக்கு அவரமாப் போறவனை நிறுத்திக் கேள்வி கேட்டா பேசுவானே, அந்தத் தொனியிலேயே கமெண்டரி சொல்றதால பாதி புரியலை. ஆனாலும் இந்த மேட்ச்சுக்கு கமெண்டரி தேவைப் படலை.
திரும்பத் திரும்ப வர்ற க்ளிஷே காட்சிகள், டெம்ப்ளேட் கமெண்ட்கள் மேட்சோட ஸ்பீடைக் குறைக்குது. கேமிராமேனைப் பாராட்டலாம். ஏகப்பட்ட டாப்லெஸ்..ச்சே..டாப் ஆங்கிள் ஷாட்ஸ், ஒயிடு அங்கிள்(!) ஷாட்ஸ் என கலக்கி இருக்கார். சில கேமிராக் கோணங்கள் நாம ஏற்கனவே நிறைய மேட்சுகள்ல பார்த்ததுதான்னாலும் நல்லாத் தான் இருக்கு.

பந்துல எச்சியைத் துப்புறது, தப்பான இடத்துக்கிட்ட வச்சுத் தேய்க்கிறது போன்ற ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். (உள் டிஸ்கி: அய்யய்யோ..நான் கலாச்சாரக் காவலன் இல்லை..இல்லை..இல்லை!)

இடையில் கொஞ்சநேரம் போரடித்தாலும், கடைசி ஏழு ஓவரில் கலக்கிவிட்டார்கள். கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாத நானே ரசித்துப் பார்த்தேன். டெண்டுல்கர் செஞ்சுரி அடிப்பது என்பது ராஜ்கிரண் கோடு போட்ட அண்டர்வேர் போடுவார்ங்கிற மாதிரி இயல்பான விஷயம். இதிலும் செஞ்சுரி அடிக்கிறார்!

இந்த மேட்ச் பல குறியீடுகளைக் கொண்டிருக்கு. பல வருஷத்துக்கு முன்னே வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப் படுத்துனாங்க. அப்புறம் சில அப்பாவிங்க உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்தாங்க.அந்த கான்செப்ட்டை அடிப்படையா வச்சுத் தான் இந்த மேட்சையே எடுத்திருக்காங்க. மேட்ச்சோட முடிவு மூலமா ‘நாம் இனிமேல் யாருக்கும் அடிமைகள் இல்லை, யாரும் நமக்கு அடிமைகள் இல்லை’-ன்னு சிம்பாலிக்கா காட்டியிருக்காங்க.

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் - கலக்கல்


மேலும் வாசிக்க... "இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 26, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.


இன்னைக்கு டிசைன் (Design) டிபார்ட்ம்ண்ட்ல வேலைக்குச் சேரணும்னா என்னல்லாம் நீங்க படிக்கனும்னு பார்க்கலாம்.

AUTO CAD:
ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியரா வேலைக்குப் போறவங்களுக்கு, பேண்ட், சட்டையை விடவும் அடிப்படைத் தேவை ஆட்டோ கேட் பற்றிய அறிவு தான். இப்போல்லாம் காலேஜ்லயே ஆட்டோகேட் சொல்லித்தர்றாங்க.அப்படி இல்லைன்னா, நீங்க வெளில ஏதாவ்து கம்ப்யூட்டர் செண்டர்ல போய்க் கத்துக்கோங்க. 
முன்னாடில்லாம், பெரிய A1 சைஸ் சீட்ல, மினி ட்ராஃப்டெர் போன்ற கருவிகளின் உதவியோடதான் கம்பெனிகள்ல டிராயிங் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.ஒரு டிராயிங் போட எப்படியும் ஒரு வாரம் ஆயிடும். இப்பவும் அந்த நிலைமை இருந்திருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான். ஆனால், நல்லவேளையா இந்த சாஃப்ட்வேர் வந்தது. ஒரு கோடு (Line) பொடணும்லா ல்-ன்னு தட்டுனாப் போதும். எவ்வளவு ஈஸி பாருங்க..உண்மையில் இப்போ டிசைன்ல இருக்குற சில பேர்கிட்ட ஒரு லைனை கையால நேராப் போடச்சொன்னா,அவங்க அந்தக் கோடை, காஷ்மீர்ல ஆரம்பிச்சு காசி போய் ராமேஸ்வரம் தாண்டி, கன்னியாகுமரில முடிப்பாங்க.

ஆட்டோகேட் பெரும்பாலும் 2D டிராயிங் வரையத்தான் யூஸ் பண்றாங்க. இதில் 3D வரையறதும் ரொம்பக் கஷ்டம்.


கம்பெனிகள்ல ஒரு பேப்பர்ல கையால ரஃபா வரிஞ்ச டிராயிங்கயோ, PDF ஃபார்மேட்ல இருக்கிற டிராயிங்கையோ உங்ககிட்ட எஞ்சினியர் கொடுப்பார். நீங்க அதை அப்படியே சரியான டைமன்சனோட ஆட்டோகேட்ல வரையணும். இது தான் உங்க வேலை. அதை க்ளையண்டுக்கு அனுப்புவாங்க. அவங்க ஏதாவது கரெக்சன் சொன்னா, அதையும் செய்யணும்.

இதுல சக்ஸஸ் ஆதத் தேவை நல்ல ஆட்டோகேட் நாலேட்ஜும், நல்ல ஸ்பீடா வரையற திறமையும் தான்்


PRO-E/SOLID WORKS/CATIA/IDEA/UNI GRAPHICS/Auto Desk:
ஆட்டோகேட் 2D ல சக்ஸஸ் ஆன அளவுக்கு 3 Dல ஆகலை. 2D ல உள்ள பிரச்சினை, நாம தான் அது 3 ல எப்படி இருக்கும்னு ஃப்ரண்ட், டாப், சைடு வியூவை வச்சு முடிவு செய்யணும். அதனால 3Dக்காகவே ஸ்பெஷலாத் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்கள் தான் மேலே சொன்னவை. இதுல உள்ள டூல்ஸை யூஸ் பண்ணி,நாம நேர்ல பார்க்குற மாதிரியே மாடலை உருவாக்கலாம். அதிலிருந்து 2D டிராயிங்-ம் எடுத்துக்க முடியும்.

CNC Machining பத்தி படிச்சிருப்பீங்க. அதுக்கு இந்த 3D மாடல் ரொம்ப உதவியா இருக்கும்.இதிலிருந்தே நேரா சிஎன்சி கோடை உருவாக்கி மெசினிங் பண்ண முடியும். அதனால நிறைய நேரமும் செலவும் மிச்சமாகும்.

ஒரு 2D டிராயிங் கொடுத்தா, அதை ஸ்டடி பண்ணி, 3D-ல வரையணும் நீங்க..என்ன தான் 3டி-ல போட்டாலும், மெசின் ஷாப்/புரடக்சன் சாப்-க்கு 2டி-ல தான் டிராயிங் கொடுக்க வேண்டியிருக்கும். 2டி-ல தான் டைமென்சன் டீடெய்ல் நல்லாக் கொடுக்க முடியும். எப்படியானாலும், ஆட்டோகேட் கத்துக்காம 3டி சாஃப்ட்வேர் படிக்கிறது நல்லதில்லை. ஆட்டோகேட் தான் எல்லாத்துக்குமே அடிப்படை.

மேலே சொன்ன சாஃப்ட்வேர் தவிர வேறு சிலவும் உண்டு. இது தான் அதிகமா யூஸ் பண்றாங்க. குறிப்பா SolidWroks & Pro-E தான் டாப்ல இருக்கு.

ANSYS:

இது ஸ்ட்ரெஸ் அனலிஸ் பண்ண உதவுற சாஃப்ட்வேர். நீங்க படிச்ச Strength of Materials, Finite Element Method போன்ற பாடங்கள் இங்க யூஸ் ஆகும். ஒரு புராடக்ட் எவ்வளாவு ஸ்ட்ரெஸ் தாங்கும், எவ்வளவு Elongate ஆகும் போன்ற விஷயங்களை, அதைத் தயாரிக்கறதுக்கு முன்னாலேயே, செக் பண்ணிக்க இது உதவுது. இதனால கம்பெனிகளுக்கு நிறைய புரடக்சன் செலவும் நேரமும் மிச்சமாகும். இது ஒரு ப்யூர் டெக்னிகல் ஒர்க்கா இருக்கும்.

PDS/PDMS/CADWorx:
மேலே உள்ள படத்தைப் பாருங்க. இது ஒரு Piping System-ன் 3டி படம். இதை SolidWorks மாதிரி சாஃப்ட்வேர்ல பண்ணா, தாவு தீர்ந்திடும். அதனால தான் PDS, PDMS, CADWorx போன்ற சாஃப்ட்வேர்ஸ் இதுக்குன்னே ஸ்பெஷலாக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை சில குறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டர்ல தான் சொல்லித் தருவாங்க. இதைப் பத்தி நிறையப் பேருக்குத் தெரியறதில்லை. ஆட்டோகேட் மட்டும் தெரிஞ்சவங்க, டைரக்டா இதைக் கத்துக்கலாம். சென்னைல MechciCADD, SivaPDS center, CADDCenter ஆகிய இடங்களில் சொல்லித் தர்றாங்க. இதைப் படிச்சா, ஆயில் ரிஃபைனரி ப்ளாண்ட் டிசைன், கப்பல்/ரிக் பைப்பிங் டிசைன், பில்டிங் பைப்பிங் டிசைன் போன்றவற்றைப் பண்ணலாம். 

மெக்கானிகல்-ல டிசைன் -ல நல்ல துறை. டிசைன் -ல பைப்பிங் டிசைன் நல்ல துறை..நல்ல காசு!

CAESAR:
இதுவும் பைப்பிங்-ல யூஸ் ஆகுற சாஃப்ட்வேர் தான். ANSYS மாதிரி, Stress Analys பண்ண, இது யூஸ் ஆகுது. பைப்பிங் பத்தி, கொஞ்சம் பேசிக் தெரிஞ்சப்புறம் இது படிக்கலாம்.

மேலே சொன்ன எதைப் படிச்சுட்டு, இண்டெர்வியூ போனாலும், ஏதோ ஒரு டிராயிங்-கைக் கொடுத்து அரை மணி நேரத்திலேயோ, ஒரு மணி நேரத்திலேயோ முடிக்கச் சொல்வாங்க. அதைக் கரெக்டாப் பண்ணீட்டீங்கன்னா, வேலை உறுதி. அதனால, ஸ்பீடா வரைய கத்துக்கிட்டாப் போதும். வேலை கிடைச்சப்புறம் அதே டிராயிங்கை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து போடுவோம்..அதனால இண்டெர்வியூவைப் பார்த்து பயந்துடாதீங்க. ஆல் தி பெஸ்ட்.

அடுத்த வாரம்...உற்பத்தி, அசெம்ப்ளி, எரக்சன் ( Production ,Assembly & Erection)


மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, February 23, 2011

ரஜினிகாந்தும் துக்ளக் சோவும் (தேர்தல் ஸ்பெஷல்)

நேற்றைய அலசலான ரஜினிகாந்தும் தமிழகமும்-ஐ தொடர்வோம் இன்றும்...

1996ல் ரஜினி வந்திருந்தால் ஜெயித்திருப்பார். கழகங்களுக்கு நல்ல ஒரு மாற்று சக்தியாக ரஜினியின் கட்சி இருந்திருக்கும் என நினைக்கின்றோம். ஆனால் அது சரிதானா? அரசியல் என்பது ‘ஒன் மேன் ஷோ’ தானா?
அந்த நேரத்தில் ரஜினியின் மூளையாகச் செயல்பட்டவர் துக்ளக் சோ தான். துணைக்கு ’திருச்செந்தூர் முருகனிடமே ஆட்டையைப் போட்ட’ ஆர்.எம்.வீரப்பன் போன்ற நல்லவர்களும் உண்டு. தொடர்ந்து  தமிழின விரோதப் போக்கையையும் மனித நேயமற்ற பிராமணீயத்தையும் முன்வைக்கும் சோ போன்றோர் ராஜ குருவாக இருந்து நடத்தும் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாகத்தான் உள்ளது. மக்கள் மத்தியில் ரஜினிக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுத்து மூடியிருப்பார்கள்.

சோவின் பிடியில் இருந்த, என்ன நடக்கிறதென்றே புரியாத அந்தச் சூழ்நிலையில், அரசியலுக்கு வராமல் இருந்ததுதான் ரஜினி தமிழினத்திற்குச் செய்த மிகப் பெரிய நன்மை!

அடிப்படையிலேயே மனித நேயம் கொண்டவராக இருந்ததனாலேயே ரஜினி இப்போது சோ&கோ-விடமிருந்து விலகி இருக்கிறார். அதற்காக ரஜினியின் ரசிகர்கள், ரஜினிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். சோவும் இப்போது இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்எனப் புரிந்து கொண்டு, விஜயகாந்த்தைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நல்ல ஜோடிதான் அது.

கர்நாடகத்தில் ராஜ்குமார் இருந்தவரை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவரை அனுசரித்தே ஆட்சி செய்யும். இல்லையென்றால் அவரது ரசிகர்களின் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்காது. ரஜினியின் தற்போதைய போக்கும் அந்த நிலை நோக்கியே செல்கிறது. ராஜ்குமார் செய்தது மிரட்டல் அரசியல். ரஜினி செய்வது ’பணிவு’ அரசியல்(?).
தற்போதைய நிலையில் ரஜினியின் நிலைப்பாடு கலைஞர்ஜி நல்லவர், ஜெயலலிதாஜி தைரிய லட்சுமி, விஜயகாந்த் இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் திறமைசாலிஎன்பது தான். யாரையும் பகைத்துக் கொள்ளவோ எதிர்த்து அரசியல் புரியவோ அவர் தயாராக இல்லை.

அவரும் சந்திக்கின்ற பாராட்டு விழா’ப் பிரச்சினைக்குக் கூட அஜித் போன்றோர் தான் குரல் கொடுக்கின்றனர். இவர் வெளியிலிருந்து ஆதரவு தருகிறார். நடிகர்களைத் திரட்டி நடிகர் சங்கத்தில் அடிக்கடி 4 மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் மூலம் வரும் ஆபத்து உள்ளதால், பாராட்டு விழாவுக்கு அட்லீஸ்ட் நேரக் கட்டுப்பாடு தேவை, ’ என்று ஒரு பணிவான தீர்மானம் நிறைவேற்றக்கூட ரஜினி முயற்சி செய்யாமல் இருப்பதில் இருந்தே அவரது மோனநிலையைநாம் புரிந்து கொள்ளலாம்.ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராக இருப்பதிலேயே அவர் முழு மனத்திருப்தி அடைந்துவிட்டார்.

ரஜினி வெளிப்படையாக நான் அரசியலுக்கு வரப்போவதில்லைஎன அறிவித்துவிடலாம். (ஒருமுறை எங்கோ சொன்னார், யாரும் கண்டுகொள்ளவில்லை, குமுதத்தைத் தவிர!) ஆனால் அதற்குத் தடையாக இருப்பது, முன்பு அவர் படங்களில் யாரோ எழுதிக் கொடுத்துப் பேசியலேட்டஸ்ட்டா வருவேன் போன்ற பஞ்ச் டயலாக்குகள் தான். புலி வலைப் பிடித்த கதையாக அந்த வசனங்களைப் பொய் என்று சொல்லவும் முடியவில்லை, உண்மையாக ஆக்கவும் முடியவில்லை.

இப்போது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ரஜினி உணர்த்தியிருப்பதுநான் யாருக்கும் தொந்தரவு பண்ண மாட்டேன், என்னையும் ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்கஎன்பதுதான். கழகங்களின் நிலையும் ரஜினி ’ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காமல் இருந்தாலே போதும்என்பது தான்.
விடு ஜூட்!
நாமும் இனி ரஜினி வந்து தமிழகத்தை ரட்சிப்பார் என்றெல்லாம் கனவு காண்பதையும், அவரை வா.. தலீவா..வாஎன டார்ச்சர் செய்வதையும் விடுத்து, அவரை தொடர்ந்து சந்திரமுகி, எந்திரன் போன்ற நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க விடுவோம்.

டிஸ்கி: நொந்து போன, புண்பட்ட மனங்களுக்கு: அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

மேலும் வாசிக்க... "ரஜினிகாந்தும் துக்ளக் சோவும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

ரஜினிகாந்தும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)

நான் டவுசர் போட்ட காலத்தில் அடிக்கடி பத்திரிக்கைகளில் வரும் பரபரப்புச் செய்தி ரஜினி அரசியலுக்கு வரபோகிறார், கிளம்பிட்டார், இதோ முக்குத் திரும்பிட்டார்என்பது தான். இப்போது என் பையனே டவுசர் போட ஆரம்பிச்சுட்டான். இப்பவும் மீடியாவுக்குப் போரடிச்சா வாராரு, வாராருஎன அதே செய்தியைப் போட்டுடறாங்க.இப்போ உங்களுக்கும் போரடிச்சா, தொடர்ந்து படிங்க..
மன்னன் படத்து சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு உண்டாக்கப்பட்ட சம்பளப் பிரச்சினையில் இருந்துதான், மீடியாக்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என முழு வீச்சில் சொல்ல ஆரம்பித்தன. அண்ணாமலை முடிந்து பாட்ஷா வந்தபோது, அது உச்சத்தில் நின்றது. 

அப்போதுதான் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசாக முதல் ஆட்சியை நட்த்திக் கொண்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ஜெ.வுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்ந்துகொண்ட தமிழர்கள், எம்.ஜி.ஆரின் இடம் நிரப்ப வேறொரு நபரைத் தேடவேண்டிய சூழ்நிலை!

சினிமாவில் எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடித்த ரஜினியே அனைவரின் கண்ணுக்குத் தெரிந்த்து அச்சரியமில்லை. மீடியாவின் ஹைக்கும் சேர்ந்துகொள்ள, இயல்பாகவே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலை 1996ல் அமைந்தது.அப்போது ரஜினி வந்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கவும் முடியும். ஆனால் அவர் வரவில்லை. ஏனென்றால் சினிமாவில் மட்டுமே எம்.ஜி.ஆராகவும் நிஜவாழ்வில் சிவாஜி கணேசனாகவும் ரஜினி இருந்ததுதான்.

எம்.ஜி.ஆருக்கென அரசியல் சார்ந்த கொள்கையும் திட்டமும் ஆரம்ப காலத்திலேயே இருந்தது. அது அவரது இளமைப் பருவத்திலேயே தானாக உருவாகி வந்தது. பிறகு சினிமா மூலம் சேர்ந்த ரசிகர் கூட்ட்த்தை தன் அரசியல் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். 
ஆனால் சிவாஜிக்கும், சிவாஜி ராவுக்கும் (என்னே ஒற்றுமை!) அம்மாதிரித் திட்டங்கள் ஏதும் இல்லை. ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாரும் சொல்றாங்க, எனவே ஏதாவது செய்வோம்என முடிவு செய்து பிறகு கொள்கை, திட்டங்களைத் தேடத் துவங்கினர். துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி என்பதும் மற்றொரு ஒற்றுமை!

கண்டக்டர் வேலையை விட்டு சென்னை ஃப்ளாட்ஃபார்முக்கு வர ரஜினி யோசிக்கவில்லை. யோசிக்காமல் வந்து ஜெயித்தார். ஆனால் அரசியலுக்கு வர யோசிக்கிறார், யோசிக்கிறார், இன்னும் யோசிக்கிறார். அரசியல் போன்ற தீவிர விஷயங்களில் ஈடுபட, சினிமா மீது இருந்த அதே வெறி தேவை. அப்படி எதுவும் அவரிடம் இல்லை என்பதே உண்மை.

ரஜினி போன்ற ஆன்மீக நாட்டம் கொண்டோரிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டுதனக்குள் மூழ்கும் தீவிரம் தான் இருக்குமேயொழிய, அரசியலுக்குத் தேவையான எதையும் மாற்றும் /எதிர்க்கும் தீவிரம் இருப்பதில்லை. அவ்வாறு இருப்பது சிவாஜி ராவ் என்ற தனிமனிதருக்கு நன்மையே. அதில் தவறேதும் இல்லை. ஆனால் தொடர்ந்து சில மீடியாக்களாலும் அறிவுஜீவிகளாலும் ரஜினி முன்னிறுத்தப் படுவதால் நாம் அவரது அரசியல் தலைமைப் பண்புபற்றி மதிப்பீடு செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

அரசியலில் நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வெண்டும். வல்லவனாக இருக்க கொஞ்சம் சூது வாது தெரியவேண்டும். அது இவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.வாக்குவன்மையும் செயல்திறனும் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் விஷயங்கள்.

ஜக்குபாய் படத்தை திருட்டுத் தனமாய் இணையத்தில் வெளியிட்டவர்களைக் கண்டிக்க நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தப் படமே ஒரு ஃப்ரெஞ் பட்த்திலிருந்து சுட்ட்துதான்’  என உண்மையைப் போட்டுடைத்தார் ரஜினி.

அழகிரி மகன் திருமண விழாவில் எனக்கு அழகிரியைத் தெரியாது, ஸ்டாலினைத் தான் ரொம்ப நாளாப் பழக்கம்என்று பேசி, அழகிரி பொதுவாழ்வுக்கு நேற்று வந்தவர் என எடுத்துக்காட்டி, திமுகவின் தலையாய பிரச்சினைக்கே தீர்ப்பு சொல்லிவிட்டு வந்தார்.

வெளியில் கொட்டும் மழையால் சென்னை மிதக்க, மாண்புமிகு முதல் அமைச்சர் இளஞன் பாடல் வெளியீட்டு விழா அரங்கில் ரஜினியுடன் அமர்ந்திருந்தார். அங்கு பேசிய ரஜினி மக்கள்லாம் கடும் மழையால கஷ்டப்படுறாங்க.அதனால ரொம்ப நேரம் பேசி முதல்வரின் நேரத்தை வீணாக்கவில்லைஎன அக்கறையோடு பேசினார். 

நிறைய நேரங்களில் இவர் தெரிந்துதான் குத்துகிறாரா இல்லை சும்மா பேசுகிறாரா என்பதே யாருக்கும் புரிவதில்லை. அப்போது இவரையும் இழுத்துக்கட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கேன்னு கலைஞரே நொந்து போயிருப்பார்.

இப்படித் தொடர்ந்து அப்பாவித் தனமாகப் பேசுபவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்?

ஜெ.மாதிரி விஜயகாந்த்துடன் கூட்டணிப் பேசுவார்த்தை நட்த்தினால் ஓப்பனாக மீடியாவிடம், ‘என்னங்க இது, 50 தொகுதி கேட்காரு. அதுகூடப் பரவாயில்ல, செலவுக்கு 100 கோடி கேட்காரு. திஸ் இஸ் டூ மச்னு சொல்லியிருப்பாரு. ஜெ. மாதிரி பல்லைக் கடிச்சுக்கிட்டு இருடி, உன்னை பின்னாடி கவனிச்சுக்கிறேன்என நினைக்கத் தெரியாது.

ரஜினியின் ஜாதகத்தில் 2ல் சனி..அதாவது நாக்கில் சனிஎனப் படித்திருக்கிறேன். அது உண்மைதானோன்னு நினைக்கும்படியாத்தான் நிறைய நேரங்களில் அவரது பேச்சு அமைந்துவிடுகிறது. சரி, அதை விட்டு விட்டுவோம். அரசியல் செயல் திறமை?

  பாபா படப் பிரச்சினையின்போது பாமகவினர் ரஜினி ரசிகர்களை ஓடஓட விரட்டி உருட்டுக்கட்டையால் அடித்தனர். தனக்காக அடிவாங்கிய அவர்களுக்கு ஆதரவாக என்ன செய்தார் ரஜினி? அறிக்கை அரசியல் நடத்தினார், கலைஞர் மன்மோகனுக்கு கடிதம் அனுப்புவதுபோல. 

உண்மையில் (எனக்கே இதை எழுத ஒரு மாதிரியாத்தான் இருக்கு)...உண்மையில் விஜய்கூட அப்படி ஒன்று நடந்திருந்தால், களத்தில் இறங்கி, அங்கே ஒரு ரசிகர் மாநாடை நடத்தி பாமகவையே(!) மிரள வைத்திருப்பார். ஆனால் வெறும் காகிதப் புலியாக மட்டுமே மிஞ்சினார் ரஜினி.

அந்தச் சம்பவத்தில் இருந்துதான் நாம் ரஜினியின் அரசியல் தகுதியை எடைபோட வேண்டும்..

ஜனநாயகத்தில் தனக்காகவும் தன்னைச் சார்ந்தோர்க்காகவும் தெருவில் இறங்கிப் போராடத் துணியாதவர் யாராக இருந்தாலும், அரசியலில் நுழைவதற்கான அடிப்படைத் தகுதியை இழந்தவர் ஆகிறார்.

1996-துக்ளக் சோ - ஜெ-தற்போதைய ரஜினியின் போக்கு-பற்றி...நாளை!
மேலும் வாசிக்க... "ரஜினிகாந்தும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 20, 2011

பார்வதி அம்மாள் மரணமும் மலேசியா வாசுதேவனின் மரணமும்

இன்று வேறொரு பதிவு போடலாம் என்றுதான் வந்தேன். இணையத்தைப் பார்த்தால், இரு துக்கச் செய்திகள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த பத்து வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அய்யாவின் மறைவைத் தொடர்ந்து இப்போது தாயாரும் மறைந்து விட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால் வாடும் தமிழ்ச் சொந்தங்களுடன் என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே கருதுவதால். உணர்வுகளை மேலும் விவரிக்க இயலவில்லை..

மற்றொரு இழப்பு மலேசியா வாசுதேவன்...

 அவர் பாடிய பாடலான ‘ஒரு கூட்டுக்கிளியாக’ நான் அடிக்கடி கேட்கும் பாடல்..’வேர்வை மழை சிந்தாமல் வெள்ளிப்பணமா’ எனும்போது ஏதோ செய்யும். உடலால் மறைந்தாலும் பாடல்களில் உயிர்வாழ்வார். 

அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கலுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
மேலும் வாசிக்க... "பார்வதி அம்மாள் மரணமும் மலேசியா வாசுதேவனின் மரணமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 19, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_3

டிஸ்கி-1: இன்னைக்குமா-ன்னு கேட்கக்கூடாது. சனி, ஞாயிறு கூட்டம் குறைவா இருக்கும்போதே இதைப் போட்டுட்டா, மற்ற ரெகுலர் கஷ்டமர்களுக்கு இடைஞ்சல் இருக்காதேன்னு தான்..வழக்கமான பதிவு நாளை...
டிஸ்கி-2: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

இன்று நாம் பார்க்கப் போவது வரைகலை(DESIGN) டிபார்ட்மெண்ட் பற்றி...

பொதுவா மெக்கானிகல் எஞ்ஜினியரிங் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு மனக்குறை உண்டு. 

என்னன்னாஐ.டி./கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும், மெக்கானிகல்/சிவில்னா சம்பளம் கம்மின்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. அது உண்மைதான், ஆனாலும் அது உண்மை இல்லை. எப்படீன்னா, வெறும்(!) மெக்கானிகல் எஞ்சினியரிங் படிச்சுட்டு, ஐ.டி.பசங்களுக்கு இணையா சம்பளம் வாங்கணும்னா, நீங்க டிசைன் என்ஜினியரா ஆனாப் போதும். அதைப் பற்றி இப்போ பார்ப்போம்.

எதுக்கு இது?
ஒரு பொருளைத் தயாரிக்க அடிப்படைத் தேவை ரா மெட்டீரியலும் ட்ராயிங்கும் தான். உதாரணமா ஒரு பம்ப் அசெம்பிள் பண்ணனும்னா உதிரிப் பாகங்களை மட்டும் கொடுத்தால் போதுமா? அதற்கான ட்ராயிங்கையும் சேர்த்துக் கொடுக்கணும். (உதிரிப் பாகங்கள் தயாரிக்கவும் டிராயிங் வேணும்) ஒரு பம்போட டிராயிங் இந்த மாதிரி இருக்கும்:

அந்த வரைபடத்தை தயாரிக்கிற டிபார்ட்மெண்ட்தான் டிசைன் டிபார்ட்மெண்ட்.

என்ன செய்வாங்க?
R&D இல்லாத கம்பெனிகள்ல டிசைன்ல இருக்குற எஞ்சினியர் குழுவே வரைபடத்துக்கான சைஸை, சில ஸ்டேண்டர்ட்(Standards) புத்தகத்தை  ரெஃபர் பண்ணி முடிவு செய்வாரு. அவருக்குக் கீழே வேலை செய்ற ஜூனியர் எஞ்சினியர்கள் அல்லது ட்ராஃப்ட்ஸ்மேன் இந்தப் படத்தை வரைவார்.

அந்த வேலைக்குத் தான் உங்களை மாதிரி ஃப்ரெஷ் எஞ்சினியர்ஸை எடுப்பாங்க. வரையணும்னா காலேஜ்ல மெசின் ட்ராயிங் கையால வரைஞ்ச மாதிரின்னு நினைச்சுக்காதீங்க. அதுக்கு ஆட்டோகேட்(AUTO CAD) போன்ற சாஃப்ட்வேர்கள் பயன்படும்.

உங்க வேலை, தினமும் உங்க பாஸ் கொடுக்கிற டிராயிங்கை அவங்க சொல்ற நேரத்துக்குள்ள முடிச்சுத் தர்றதுதான்.

இங்கே சேரணும்னா..
AUTO CAD, PRO-E, Solidworks போன்ற சாஃப்ட்வேர்களைப் படிச்சவங்கதான் இங்கே சேர முடியும். இவற்றைப் பற்றி இங்க எழுதுனா பதிவு பெருசாப் போயிடும். இதைப் பற்றி விரிவா அடுத்த பதிவில் சொல்றேன்.

டப்பு தேறுமா?
மெக்கானிகல் என்ஜினியரிங்கில் அதிக சம்பளம் கொடுக்கும் துறை இது மட்டுமே! அதான் மேலே முதல் பத்தியிலேயே சொல்லிட்டனே, இன்னும் என்ன சந்தேகம்!

எங்கெல்லாம் இருக்கும்?
இந்த டிபார்ட்மெண்ட் ஏதோவொரு கம்பெனியில் ஒரு பகுதியா மட்டும் இருக்கிறதில்லை. இதுக்குன்னே தனிக் கம்பெனிகளே இருக்கு. டிசிஎஸ், விப்ரோ போன்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள்கூட மெக்கானிகல் டிசைனுக்காக தனி டிவிசனே வச்சிருக்காங்க. பெரும்பாலும் இந்த மாதிரிக் கம்பெனிகளோட க்ளையண்ட்ஸ் வெளிநாட்டுக் கம்பெனிகளா இருக்கும். அதாவது நீங்க போடற டிராயிங்கை வெளிநாட்டுல இருக்குற யாரோ ஒருத்தர் யூஸ் பண்ணி உற்பத்தியோ அசெம்ப்ளியோ பண்ணுவார்.

ரொம்ப நல்ல விஷயம் என்னன்னா, இது ஒரு ப்யூர் ஒயிட் காலர் ஜாப்! ஒரு மெக்கானிகல் என்ஜினியருக்கு இப்படி அமைவது ஆச்சரியம்தான் இல்லையா!

அடுத்த வாரம் நீங்க படிக்க வேண்டிய சாஃப்ட்வேர்ஸ் பத்தி பார்ப்போம்!

மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_3"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 18, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2


டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

RESEARCH & DEVELOPMENT (ஆராய்ச்சி & மேம்பாடு):
நமது என்ன வேலையில் சேரலாம் தொடரில் இன்று நாம் பார்க்கப் போவது R&D டிபார்ட்மெண்ட் பற்றி..


எதுக்கு இது?
ஆராய்ச்சினதும் பயந்துடாதீங்க. உற்பத்தி செய்யப்படுற பொருளின் எண்ணிக்கையைக் கூட்டவோ அல்லது அந்தப் பொருளைத் தயாரிக்க ஆகும் செலவைக் குறைக்கவோ இந்த டிபார்ட்மெண்ட் வேலை செய்யும்..
பொதுவா ஆராய்ச்சி செய்வதே, உற்பத்தி முறையை அல்லது பொருளை டெவலப் பண்றதுக்காகத் தான் இருக்கும்.
என்ன செய்வாங்க?
சரி, அப்படி என்ன ஆராய்ச்சி பண்றாங்க..ஒரு கம்பெனி ஒரு நாளைக்கு 2000 நட்டு தயாரிக்குன்னு வச்சுக்கோங்க. இவங்க அதைக் கூட்டமுடியுமா, என்ன செய்தால் கூட்டலாம், மெசினோட கெப்பாசிட்டியைக் கூட்டுனா வேலைக்காகுமா, இல்லே, வேற மெட்டீரியல் யூஸ் பண்ணலாமா, அதனால  வேற ஏதாவது பாதிப்பு வருமான்னு பல வகையில மண்டையை உடைச்சுக்கிறதுக்குப் பேருதான் ஆராய்ச்சி. சில நேரங்கள்ல பொருளோட தரத்தைக் கூட்ட ஆராய்வதும் உண்டு.

ஒரு சில கம்பெனியிலதான் உண்மையான ஆராய்ச்சி நடக்குது. மத்த கம்பெனில நடக்கிறதெல்லாம் சுடுற' வேலை தான்.
உதாரணமா ஒரு பம்ப் தயாரிக்கிற கம்பெனியை எடுத்துக்குவோம். ஏதாவது வெளிநாட்டுக் கம்பெனி, புது டெக்னிக்ல ஒரு பம்ப் தயாரிச்சு சக்ஸ்ஸ் பன்ணிட்டாங்கன்னா, அந்த பம்ப்பை வாங்கி பிரிச்சு ஆராய்ந்து, அதே மாதிரி இன்னொன்னு செய்றது. மாட்டிக்கிடாம இருக்க சைஸ், மெட்டீரியல்போன்ற சில விஷயங்களை மாத்திடுவாங்க.

இங்கே சேரணும்னா..

பொதுவா இந்த டிபார்ட்மெண்ட்ல நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளைத் தான் எடுப்பாங்க. சில கம்பெனிகள் ட்ரெய்னியா ஃப்ரெஷ் என்ஜினியர்களை எடுக்கறதும் உண்டு. இண்டர்வியூக்கு கூப்பிட்டா, அவங்க என்ன பொருளைத் தயாரிக்கிறாங்களோ, அதைப் பற்றி நல்லாப் படிச்சிட்டுப் போங்க.
டப்பு தேறுமா?
இதுல வேலை செய்றவங்களுக்கு பொதுவா நல்ல சம்பளம் இருக்கும். அதனால யாராவது ஏமாந்து போய் உங்களுக்கு R&D-ல வேலை கொடுத்தா, பயந்து போய் வேணாம்னு சொல்லிடாதீங்க
எங்கெல்லாம் இருக்கும்?
பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை (நட்டு, பம்ப், பஸ்!) உற்பத்தி செய்ற கம்பெனிகளில் இந்த டிபார்ட்மெண்ட் இருக்கும். உற்பத்தி சாராத கம்பெனிகள்ல பெரும்பாலும் R&D டிபார்ட்மெண்ட் இருக்கறதில்லை. டிசைன்(Design) டிபார்ட்மெண்ட்டே அந்த வேலையைப் பார்த்துக்கும்.

அதைப் பற்றி தொடரின் அடுத்த பதிவில் பார்ப்போம்.

டிஸ்கி: ரெசியூம்(Resume) எப்படித் தயாரிப்பது, இண்டர்வியூவில் எப்படிப் பேசுவது(புளுகுவது) என்பது பற்றி பின்னால் சொல்கிறேன்!
மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 17, 2011

புருஷத் தியாகியும் கள்ளக்காதலனும் (கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்)

நன்றி: இந்தியா படு ஸ்பீடாக வல்லரசு ஆகிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு!

புண்ணிய பூமியான திருவண்ணாமலைக்குப் பக்கத்தில்தான் எப்படியோ அந்த அவதாரம் நிகழ்ந்தது. அவர் பெயர் கஸ்தூரி. அந்த தூரிக்கும்(பெண்ணின் நலன் கருதி பெயர் சுருக்கப்படுகிறது!!)அதே ஊரில் அவதரித்த லோகனாதனுக்கும் பத்திக்கிச்சு.அந்தக் கதை ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே, தூரிக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. தூரி தான் நல்ல பொண்ணாச்சே..அதனால வீட்ல பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கிச்சு. அந்த பெரிய மனசுக்காரர் பேரு ஆறுமுகம். (என்னடா இது, முருகருக்கு வந்த சோதனை!)
Profile ஃபோட்டோல இருக்குற புள்ள பாக்குதுய்யா!
தூரியும் ஆறுமுகம்கூட நல்லாக் குடும்பம் நடத்தி ஒரு பிள்ளையும் பெத்துக்கிச்சு. அதுக்குப் போட்டியா,நம்ம லோகும் வேற ஒரு பொண்ணைக் கட்டி 2 பிள்ளை பெத்துக்கிட்டாரு. இதுவரைக்கும் நல்லாத் தான் போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ரெண்டு பேருக்கும் பழைய லவ்வு பீறிக்கிட்டு வந்திடுச்சு. அவ்வளவு தான், லோகு உடனே கிளம்பி தூரி வாழ்ந்த சென்னைக்கே வந்துட்டார். டென்சன ஆன ஆறுமுகம், கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போயிட்டாரு.(பழனிக்கான்னு யாராவது கேட்டீங்கன்னா...அழுதுடுவேன்)

அப்புறம் என்ன, மாதர்குல மாணிக்கமான தூரியும் லோகும் ஒரு வருசம் ஜாலியா குடும்பம் நடத்துனாங்க. ஆனா வெளில நம்ம தியாகச் செம்மல் ஆறுமுகத்துக்குத் தான் ஒரு ஆண்டி கூட செட் ஆகலை. வெறுத்துப் போன தியாகி, திரும்ப வீட்டுக்கே வந்துட்டாரு.(முருகா..நீ ஏன் நல்லவங்களையே சோதிக்கிற..)

இப்போ பெரிய மனுசங்களை வச்சு பஞ்சாயத்தைக் கூட்டுனாரு ஆறுமுகம்.பெருசுகளும் அந்த காதல் பறவைகளுக்கு எடுத்துச் சொன்னாங்க. தூரியும் லோகும் ஒரு வழியா பிரியறதுக்கு ஒத்துக்கிட்டாங்க.

அப்போதான் லோகு ஒரு வேண்டுகோளை வச்சாரு. ‘கடைசியா, ஒரு வாரம் தூரி கூட வாழ்ந்துட்டுப் போறேன். ஆறுமுகமும் இருக்கட்டும், எல்லாரும் ஒன்னா ஒரே வீட்ல இருப்போம்’ன்னாரு (செத்தப் பொறுங்கோ..நேக்குத் தலையெல்லாம் சுத்திண்டு வர்றது.கொஞ்சம் ஜலம் குடிச்சுண்டு வந்திடறேன்!)

பத்தரை மாத்துப் பத்தினியான தூரி, ’என் புருஷன் ஆறுமுகத்துக்கு ஓ.கேன்னா, எனக்கும் ஓ.கேன்னு சொல்லிடுச்சு.’வாழ்கையிலே எவ்வளவோ தியாகம் பண்ணியாச்சு, ஒருவாரம் தானே’ன்னு ஆறுமுகமும் ஒத்துக்கிட்டாரு. ரெண்டு மூணு நாள் நல்லாத் தான் போச்சு. அம்மணி ரெண்டு பேருக்கும் சோறு வடிச்சுக் கொட்டி, தடபுடல் விருந்தோட குடும்பம் நடத்துச்சு(குடும்பமாடா அது..).
சண்டாளா..என் படத்தை ஏன்யா போட்டே?

ஒரு நாள் நைட் நம்ம(!) தூரியும் லோகும் (தனியா) போய் படுத்துட்டாங்க. நம்ம தியாகி டிவி பார்த்துக்கிட்டு இருந்தாரு. தூரிக்கு டிவி சத்தம் தொந்தரவா இருந்தது. ’நாம யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாம வாழ்ந்துகிட்டிருக்கோம், இந்த மனுசன் இப்படி டிவியைப் போட்டு நம்மளைத் தொந்தரவு பண்றானே’ன்னு, எந்திரிச்சுப் போய் ஆறுமுகத்துகிட்ட டிவியை ஆஃப் பண்ணச் சொல்லுச்சு.

என்ன அதிசயம்..ஆறுமுகம் கடுப்பாகி கத்தியால குத்த வந்துட்டாரு.  இந்த அநியாயத்தை ’அதையும் தாண்டிப் புனிதமான காதலர்’ லோகு வேடிக்கை பார்க்க முடியுமா..அவர் வந்து தடுத்தாரு. அவ்வளவுதாங்க, ஆறுமுகம் அந்தக் கத்தியாலயே சதக், சதக்னு லோகை குத்தீட்டாரு.அங்கயே லோகு அவுட்டு! இப்போ ஆறுமுகம் ஜெயில்ல!  

அட நன்னாரிப் பயலே, இப்போகூட ‘ஏன் டிவி பார்க்கவிடலை’ன்னு தான் குத்துனயா நீயி....விளங்கிரும்டே..விளங்கிரும்.

உலகம் இந்த ரேஞ்ச்ல போறது தெரியாம இன்னும் ‘ஆத்தாவும் தாத்தாவும்’னு சின்னப்புள்ளத் தனமா காதலர் தின ஸ்பெஷல் போடறமேன்னு நினைச்சு, சுவத்துலயே நங்கு நங்குன்னு முட்டிக்கிட்டேன்.அதுக்குப் பின்னூட்டமும் ஓட்டும் போட்ட அப்பாவிப் புள்ளைகல்லாம் இந்தப் பதிவைப் படிச்சிட்டு என்ன செய்யப் போகுதுகளோ தெரியல.

என்ன கொடுமை சரவணா இது!

மேலும் வாசிக்க... "புருஷத் தியாகியும் கள்ளக்காதலனும் (கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, February 15, 2011

ராகுல் காந்தியும் காங்கிரஸும் (தேர்தல் ஸ்பெஷல்)_நிறைவுப் பகுதி

திமுகவும் அதிமுகவும் தங்கள் தோள்களில் காங்கிரஸைச் சுமக்காவிட்டால், எப்போதோ அது தமிழகத்தில் சமாதிக்குப் போயிருக்கும். தமிழக மக்களிடமிருந்து, குறிப்பாக இளைஞர்களிடமிருந்து காங்கிரஸ் அன்னியப்பட்டு எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன. ஆனாலும் ஒட்டிக்கொண்டே காங்கிரஸின் காலம் ஓடுகிறது.
ஒரே ஒரு கொலைக்குப் பழிவாங்க, ஒரு இனத்தையே கருவறுத்து நிற்கிறது காங்கிரஸ். அதற்குப் பின்னரும் ஒன்றுமே நடவாதது போல் ராகுலும் காங்கிரஸாரும் பேசுவதையும், கவர் வாங்கிக் கொண்டு மீடியாக்கள் ராகுலின் விசிட்டை கவர் ஸ்டோரி ஆக்குவதையும் பார்க்கும்போது நம்மைப் பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இலங்கையில் போர் முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அங்கு நம் சகோதரர்கள் தம் சொந்த மண்ணிற்குத் திரும்ப இயலவில்லை. இது போதாதென்று, இங்கு மீனவர் படுகொலையும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.  இதையெல்லாம் தடுத்து நிறுத்தக் கூடிய காங்கிரஸ், அதற்காக துரும்பைக்கூட நகர்த்தவில்லை. ஆனாலும் தைரியமாக வாக்குக் கேட்டு கிளம்பி வருகிறார்கள்!

சுதந்திர காலத்தில் இருந்தே இந்தியாவில் வலுவாக வேரூன்றி இருக்கும் காங்கிரஸ் போன்ற பேரியக்கத்தை முற்றாக இல்லாமல் அழித்தொழிப்பது இப்போது நடைமுறச் சாத்தியமில்லாத ஒன்றே. ஆனாலும் இந்தத் தேர்தலில் கடுமையான தோல்வியை காங்கிரஸுக்குத் தருவதன் மூலம், தனது தவறை அவர்கள் உணரவைக்க முடியும். தன்னை சுய பரிசோதனை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழகத்தில் காங்கிரஸை நாம் கொண்டுசெல்வது நம் முன் இருக்கும் தலையாய கடமை.

எப்போதுமே அடுத்தவர் வாழ்வைக் கெடுத்தோர் தமக்குள் அடித்துக் கொண்டு வீழ்வது வழக்கம். இங்கும் அது ஆரம்பித்துள்ளது. அருமை மகள் கனிமொழி & கோ செய்திருக்கும் காரியத்தினால், காங்கிரஸிடம் வசமாக மாட்டிக்கொண்டு நிற்கிறது திமுக. சமீபத்திய கலைஞரின் டெல்லி விசிட்டின்போது, முடிந்தவரை அவரை அவமானப்படுத்தி அனுப்பியதாக செய்திகள் வருகின்றன. அப்போது, ராகுலின் அதிரடி பற்றியும் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டுள்ளன.
திமுக ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டிருப்பதால், இப்போது அவர்களை மிரட்டி அதிக சீட்டுகளை வாங்கிவிடலாம் என ராகுல் கணக்குப் போடுகிறார். அரசியலின் எல்லா கோல்மால்களை அறிந்த கலைஞரிடம் தன் வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறார் ராகுல். கலைஞரும் வேறுவழியின்றி இப்போது இவர்கள் இழுக்கும் இழுப்புக்கு ஒத்துக் கொண்டுவிடலாம். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடும்போது திமுகவினர் எப்படி முதுகில் குத்துவர் என ராமதாஸிடம் கேட்டால் நன்றாகச் சொல்லுவார்.

தேர்தல் கூட்டணி என்பது வெறுமனே தலைவர்கள் மத்தியில் மட்டும் நிகழ்வதன்று. தொண்டர்கள் வரை அந்தக் கூட்டணி எவ்வித நெருடலுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வயதான காலத்தில் பிள்ளைகளால் கலைஞர் சீரழிக்கப் படுவதையும், அதை காங்கிரஸ் பயன்படுத்தி, மிரட்டுவதையும் திமுக தொண்டன் கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.

சீமான் போன்றோர் உணர்ச்சிகரமாக ஈழப்பிரச்சினையை எழுப்பும்போது, சுரணை கெட்ட நம் சமூகம் கொஞ்சம் சுரணை கொள்ளும். அதோடு காங்கிரஸின் மிரட்டல் அரசியலின் மீதுள்ள வெறுப்பும் சேரும்போது, காங்கிரஸின் தோல்வி எளிதாகும்.

காங்கிரஸின் விசயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் பலம், எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருப்பதுதான். குஜராத்தில் நடந்த மதப் பயங்கரவாதத்திற்குப் பின், மக்களுக்கு காங்கிரஸை விட்டால் மத்தியில் ஆள வேறு நாதியில்லை என்றாகி விட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த துரதிர்ஷ்டமான நிலை இல்லாதது சந்தோசமே.

வைகோ, சீமான் போன்றோர் ’அம்மாவின்’ மேலுள்ள அக்கறையைக் குறைத்துக் கொண்டு, முழுமூச்சாக காங்கிரஸ்க்கு எதிராக பிரச்சாரம் செய்தால், ஸ்பெக்ட்ரமில் அடித்த காசு அள்ளி விடப்படவில்லையென்றால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பீகாரை விடவும் மோசமான தோல்வியைத் தழுவும்.

இல்லையென்றால், எப்படி சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பார்த்து நொந்துபோனோமோ அப்படியே இப்போதும் நொந்து போவோம். சுரணை கெட்ட இனத்தில் பிறந்துவிட்டு வேறென்ன செய்வதாம்.


மேலும் வாசிக்க... "ராகுல் காந்தியும் காங்கிரஸும் (தேர்தல் ஸ்பெஷல்)_நிறைவுப் பகுதி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 14, 2011

ராகுல் காந்தியும் காங்கிரஸும் (தேர்தல் ஸ்பெஷல்)



மாபெரும் இன அழிப்பை தமிழர்களுக்குச் செய்துவிட்ட பின்னரும் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்தில் இன்னும் கிளை பரப்பி நிற்பதும், அதைப் பற்றி நானும் தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதுவதும் வெட்கப் பட வேண்டிய விஷயம் தான். ஆனாலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வந்த அன்றே நான் வெட்கத்தைத் தொலைத்து விட்டதால்.......
‘காங்கிரஸைக் கலைத்து விடுங்கள்’ என்ற காந்தியின் வேண்டுகோளை நேரு நிராகரித்து விட்டாலும், தொடர்ந்து வந்த இந்திரா, ராஜீவ், சோனியா போன்றோர் தங்களால் முடிந்த அளவு காங்கிரஸை அழிக்க முயற்சி செய்துகொண்டுதான் உள்ளனர். அந்த வரிசையில் புது வரவு ராகுல் காந்தி.

உண்மையில் பிரியங்காவைத் தான் காங்கிரஸார் ராஜீவின் வாரிசாக எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென இப்படி ஒரு காமெடி பீஸ் வந்திறங்கும் என அவர்களே எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கே அப்படியென்றால், நமக்கு?....

காங்கிரஸால் திடீரென களமிறக்கப்பட்ட ராகுல், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், தான் 1995ல் ஹேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிடியில் ‘Developmental Economics'-ல் M.Phil முடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் படித்தது ‘Development Studies'. மேலும் அவர் படித்தது 1995ல் அல்ல, 2005ல். அதை விடவும் மோசம் அவர் இன்னும் M.Phil முடிக்கவில்லை, ஒரு பாடம் புட்டுக்கிச்சு. அதை விடவும் ரொம்ப கேவலமான விஷயம், வருங்கால பாரதப் பிரதமர் ஃபெயிலானது 'National Economic Planing & Policy'.

மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் ஒரு பேப்பர் கூட முடிக்காத ராஜீவ், மெத்தப் படித்த மேதாவியாக தன்னைக் காட்டிக்கொண்டதை விட இது பரவாயில்லை.  Cambridge யுனிவெர்சிடியில் ஒரு ஓரத்தில் நடந்த Lennox Cook School-ல் ஸ்போக்கன் இங்கிலீஸ் கோர்ஸ் படித்த சோனியா, தன்னை Cambridge யுனிவெர்சிட்டி ஸ்டூடண்டாக 2004 தேர்தல் வேட்புமனுவில் சொல்லிக்கொண்டார். குட்டு வெளிப்பட்டதும் அது ‘டைப்போ எரர்’ என்று சமாளித்தார். இவ்வாறு குடும்பமே ஒரு டைப்பா அமைந்தது பெரிய கொடுப்பினைதான்.

படிப்பு அறிவுக்கான அடையாளம் அல்ல. பின் எதற்காக இந்த முட்டாள்தனமான காரியத்தைச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களின் தியாகத்தைப் பற்றிய அறிவு கொஞ்சமாவது உள்ள காங்கிரஸ்காரன்கூட இந்தக் காரியத்தைச் செய்யமாட்டான். 

ரொம்ப நாளா வாய் பேச முடியாம இருந்த பிள்ளை, முதல்முதலா வாய் திறந்ததும்’ நீ, எப்பம்மா தாலியறுப்பே’ன்னு கேட்டுச்சாம். இளைய தலைமுறையின் தலைவராக களமிறக்கப்பட்ட ராகுல் நடவடிக்கையைப் பார்த்தவங்களுக்கு அந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வந்தது.
காங்கிரஸ் பலவீனமாக உள்ள பீகார், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு ராகுலிடம் ஒப்படைக்கப் பட்டது. சிங்கம் பீகாரில் களமிறங்கியது. இளைஞர் காங்கிரஸில் ‘ஏராளமான’ இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர்.  திடீர் திடீரென பீகாருக்கு விசிட் அடித்தார். கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து, காங்கிரஸ்க்கு இனி யார் தயவும் தேவையில்லை என முடிவு செய்தார். பீகார் மக்களும் இனி காங்கிரஸ் தயவு தேவையில்லையென முடிவு சொன்னார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரஸ் பீகாரில் 2 சீட் தான் ஜெயித்தது. புத்திசாலியான ராகுல் பேச்சைக் கேட்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 4 சீட் தான் ஜெயித்தது. (அடேங்கப்பா..டபுள் ஆக்கீட்டாரே!). இவ்வாறு பீகாரில் தன் வேலையைக் காட்டிய ராகுல், இப்போது களமிறங்கியிருப்பது தமிழகத்தில்!

ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்வது பற்றி ராகுல் அடித்த கமெண்ட், ஒரு சோறு பதமாக, ராகுலின் முதிர்ச்சியைக் காட்டியது. ”ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவர் சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சேர்வதற்கு கதவு திறந்து வைக்கப்பட்டு உள்ளது”  ஜெ. கூட ரஜினியைப் பற்றி வெளிப்படையாக இவ்வளவு கேவலமாகக் கமெண்ட் அடித்ததில்லை. 

கட்சியை நட்சத்திர ஓட்டல்களிலும் பிரஸ் மீட்டிங்கிலும் பேசியே வளர்த்துவிட முடியும் எனக் கனவு காண்கிறார் ராகுல். பீகாரிலோ தமிழகத்திலோ எந்தவொரு மக்கள் பிரச்சினைக்காகவும் ஒரு சிறிய போராட்டத்தைக் கூட நடத்தியதில்லை இந்த ஹை-டெக் அரசியல்வாதி.

அதுசரி, எப்படி பிரச்சினைக்கு எதிராகப் போராட முடியும்? பிரச்சினையே காங்கிரஸ் தானே!

--நிறைவுப் பகுதி நாளை.

மேலும் வாசிக்க... "ராகுல் காந்தியும் காங்கிரஸும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 12, 2011

ஆத்தாவும் தாத்தாவும் (காதலர் தின ஸ்பெஷல்)

நீ வெற்றுக் காலுடன்
நடந்து போகையில் - என்
நெஞ்சில் தைக்கிறது
நெருஞ்சி முள்.

ஒவ்வொரு காதலர் தினம் வரும்போதும் எனக்கு அவர்களின் நினைவு வரும். இந்த வருடம் அந்த நினைவுகள் உங்களுக்காக இங்கே....

எங்கள் ஊரில் ‘ஆத்தா’ வசித்து வந்தார். வயது எப்படியும் 60ஐ தாண்டி இருக்கும். அவர் பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. எல்லோருக்கும் ஆத்தா தான் அவர்.  அவருக்குத் துணையாக இருந்தது அவரின் கணவரான தாத்தா மட்டுமே. அவர்களது பிள்ளைகள் திருமணமாகி வேறு வீட்டில் வசித்து வந்தனர்.

சிறுவர்களான எங்களின் கவனத்தை ஆத்தா கவர்ந்ததுக்குக் காரணம் அவரது ஞாபக மறதி. எந்தவொரு விசயத்தையும் கொஞ்ச நேரத்தில் மறந்து போய்விடுவார். ’கஜினி’க்கு எல்லாமே மறக்கும். ஆனால் இவருக்கு அப்படி அல்ல.

’கடைக்குப் போவோம் எனக் கிளம்பினால் பாதி வழியிலேயே மறந்துவிடுவார். எதிரில் வரும் யாராவது ‘என்னாத்தா இங்க நிக்க?” என்றால் ‘நான் எங்கே போறதுக்கு கிளம்பினேன்னு மறந்துட்டேன்யா’ என்பார். பெரும்பாலும் அவருக்குப் பின்னாலே தாத்தா வந்து கொண்டிருப்பார். ‘கடைக்குப் போறதுக்கு வந்தே, தாயி’ என்று சொல்லி அழைத்துச் செல்வார். அவர் மறக்கவேண்டும் என்பதற்காகவே பேச்சுக் கொடுக்கும் சிறுவர்களும் உண்டு. 

தாத்தா வேலைக்குப் போய்விட்டார் என்றால் கஷ்டம்தான். ஆத்தா திரும்பி வீட்டிற்குப் போய், ஞாபகம் வரவும் மீண்டும் கடைக்குப் போகும். தாத்தா வீட்டில் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆத்தா கண்மாய்க்குப் போனால்கூட நிழல் போல் பின்னாலேயே வருவார்.

அப்படி ஒரு நாள் கண்மாய்க்குப் போன ஆத்தா, தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இடுப்பில் சரியான அடி. தாத்தா தான் தூக்கிக்கொண்டு ஓடினார். என்ன வைத்தியம் பார்த்தும் இனிமேல் நடக்க முடியாது என்று கை விரித்து விட்டார்கள். படுத்த படுக்கை தான்.

ஆறு மாதத்திற்கு மேல் தாத்தா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். எல்லாம் என்றால் காலைக் கடனிலிருந்து, குளிப்பாட்டி புடவை கட்டுவது வரை. ஊரே உச் கொட்டியது. கடவுளும் ஒருநாள் அந்தக் கஷ்டத்திற்கு முடிவு கட்டினார்.

அன்று அதிகாலையிலேயே ஆத்தாவுக்கு இழுக்க ஆரம்பித்தது. ஊர் சனம் வீட்டின் முன் கூடத் தொடங்கியது. தாத்தா, ஆத்தாவின் கையைப் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தபடியே ஆத்தாவின் உயிர் பிரிந்தது. பெண்கள் ஆத்தாவைக் குளிப்பாட்ட தயாரானார்கள். ’எய்யா, கொஞ்ச நேரம் வெளில இரும். குளிப்பாட்டி சாத்தி வச்சுட்டுக் கூப்பிடறோம்’ என்று சொல்லி தாத்தாவை வெளியே அனுப்பினர். ஆத்தாவை தயார் செய்து நாற்காலியில் வடக்குப் பார்த்து சாத்தி வைத்தார்கள்.

ஆத்தாவின் நெற்றியில் பொட்டும் காசும் வைக்க தாத்தாவைத் தேடினார்கள். அவர் வீட்டின் பின்புறம் போனதாக அங்கிருந்த ஒருவர் சொல்ல, பின்னால் போய்ப் பார்த்தார்கள்.

அங்கே தாத்தா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்!



வருங்கால / நிகழ்கால வாழ்க்கைத் துணையை நேசிப்போருக்கு காதலர் தின நல்வாழ்த்துகள்.


மேலும் வாசிக்க... "ஆத்தாவும் தாத்தாவும் (காதலர் தின ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.